அவிநாசி, அக்.29– திருமுருகன்பூண்டி நகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து நகர்மன்றக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர். திருமுருகன்பூண்டி நகர்மன்ற கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகர்மன் றத் தலைவர் குமார் தலைமையில் துணைத்த லைவர் ராஜேஸ்வரி, நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் நகர்மன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் பேசுகையில், தமிழக அரசால் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு வரி செலுத்திய வர்கள் மீண்டும் வரி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் எல்லாம் வழங்கப்பட் டுள்ளது. தாமதக் கட்டணத்திற்கு வரி உயர்த்தி உள்ளனர். ஆண்டுக்கு சொத்து வரி ஆறு சதவிகிதம் உயர்த்துவதுடன், அது போக தாமதக் கட்டணம் என 1 சதவிகிதம் வசூ லிக்கப்படும் என்றும் அரசாணை பிறப்பித் துள்ளனர். இதனால் பொதுமக்கள் வெகு வாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டுமென்று தெரிவித்தோம். அர சின் கொள்கை முடிவு என்று சொல்லி ஆட்சே பம் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்ற அனு மதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே வெளிந டப்பு செய்வதாக சுப்பிரமணி கூறினார். இதை யடுத்து மார்க்சிஸ்ட் கட்சி நகர்மன்ற உறுப்பி னர்கள் இருவரும் வெளிநடப்புச் செய்தனர். முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் தேவரா ஜன் பேசுகையில், நிரந்தரமான கமிஷனர் இருப்பதில்லை, பணியாற்றும் இன்ஜினியர் மற்றும் பலதரப்பட்ட அரசு அலுவலகம் சார்ந்த ஊழியர்கள் மாற்றம் நடைபெற்று வருகிறது இதையெல்லாம் நிரந்தரமாக வேண்டும், தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பின ருக்கும் போனஸ் வழங்க வேண்டும், சொத்து வரி உயர்வை கண்டிக்கின்றோம் இதன் கார ணமாக வெளிநடப்பு செய்கிறோம். இதனைத் தொடர்ந்து திமுகவை சேர்ந்த பாரதி பேசுகையில் எனது வார்டுக்குட்பட்ட சுகாதாரம் சார்ந்த பிரச்சனை குறித்து எனது கைப்பட எழுதிய கடிதம் ஆணையாளருக் கும் தலைவருக்கும் வழங்கினேன். இந்த கடி தமானது எங்கள் கட்சி அலுவலக வாட்ஸ் அப் குழுவில் இடம்பெறுகிறது, தலைவர் மற்றும் ஆணையருக்கு தெரியாமல் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட கடிதம் எப்படி வெளியே செல்கிறது என்பதை விசாரணை மேற் கொண்டு இதனை தடுத்து நிறுத்த வேண்டும், எனத் தெரிவித்தார்.