தருமபுரி, ஜூன் 21- பெரியாம்பட்டி ஊராட்சியில் மார்க் சிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் முயற்சியில், மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, மக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது பெரி யாம்பட்டி ஊராட்சி. இங்குள்ள காம ராஜ் நகர் மற்றும் 6, 7, 8 ஆகிய வார்டு களைச் சேர்ந்த மக்களுக்கு நீண்டகால மாக குடிநீர் பற்றாக்குறை இருந்து வந் தது. சீரான குடிநீர் கிடைக்க மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என சிபிஎம் ஒன்றிய கவுன்சிலரிடம், மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, பொது நிதியில் இருந்து 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட சிபிஎம் ஒன்றிய கவுன் சிலர் உதயக்குமார் முயற்சி மேற்கொண் டார். புதியதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை மக்கள் பயன் பாட்டிற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் வி.உதய குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பெரியாம்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பி.எஸ். ரமேஷ், தமிழ்செல்வி சாந்தலிங்கம், காளியப்பன் உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.