districts

img

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்க

கோவை, டிச.25- கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் உரிய திட்டங்களை மேற் கொள்ள வேண்டும் என  சிபிஎம் கோவை போக்குவ ரத்து இடைக்குழு மாநாடு  வலியுறுத்தியுள்ளது.  மார்க்சிஸ்ட் கட்சியின் போக்குவரத்து இடைக்குழு மாநாடு கட்சியின் கோவை  மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கருப்பையா, என்.ஜெயபா லன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், போக்குவ ரத்து அரங்க இடைக்குழு செயலாளராக பரமசிவம் உள் ளிட்ட 7 பேர் கொண்ட அரங்கக்குழு தேர்வு செய்யப்பட் டது.  இம்மாநாட்டில், போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும். சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கோவை மாநகரின் குடிநீர் விநியோக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்று சூழலை பாதுகாக்க பொது போக்குவரத்தை பலப்படுத்த கூடுதல் பேருந்துகளை அரசு இயக்க வேண்டும். கோவை மாநக ரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் உரிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.