districts

img

அதிமுக - பாஜக ரகசிய கூட்டணிக்கு வேட்டு சிபிஎம் வேட்பாளர் பெரும் வெற்றி

அவிநாசி, பிப்.22- அவிநாசி அருகே திருமுருகன் பூண்டி நகர மன்றத் தேர்தலில் அதி முக - பாஜக மேற்கொண்ட ரகசிய கூட்டணியை தகர்த்து மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு அமோக வெற் றியை மக்கள் பரிசளித்துள்ளனர். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள் ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடந்த சனியன்று நடைபெற்றது. இதில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் திருமுருகன்பூண்டி நகராட்சி 10 ஆவது வார்டில் மார்க் சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுப்பிர மணி போட்டியிட்டார். அதேநேரம், இவரை எதிர்த்து பாரதிய ஜனதா கட் சியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் கள மிறங்கினார். குறிப்பாக, இந்த வார்டில் அதிமுக தங்களது கட்சி வேட்பாளரை நிறுத்தாமல், மறைமுகமாக பாஜக-விற்கு ஆதரவு தெரிவித்தது. மேலும், பாஜகவிற்கு ஆதரவாக சில இடங் களில் வாக்குகளையும் அதிமுகவினர் சேகரித்தனர். இந்நிலையில், இந்த வார்டில் பதி வான வாக்குகள் எண்ணும் பணி செவ் வாயன்று நடைபெற்றது. இதில் மார்க் சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுப்பிர மணி 489 ஓட்டுக்கள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அதிமுகவின் மறைமுக ஆதரவுடன் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் 455 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.