districts

img

தொழில் பாதுகாப்பு, தொழிலாளர் வாழ்வுரிமை கோரி திருப்பூரில் நூறு மையங்களில் சிபிஎம் பிரச்சாரம்

திருப்பூர், பிப்.12 - திருப்பூரில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி செவ்வாயன்று (பிப்.14) நடத்தும் தொழில் பாதுகாப்பு - தொழி லாளர் வாழ்வுரிமை மாநாட்டை விளக்கி  ஞாயிறன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் நூறு இடங்களில் இருசக்கர வாகனப் பிரச்சாரம் செய் யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் ஜவுளி  உள்ளிட்ட சிறு, குறு தொழில்களைப்  பாதுகாக்க வேண்டும், தொழிலாளர் களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம், சம வேலைக்கு சம ஊதியம், குடியி ருப்பு உள்ளிட்ட வசதிகளை உத்தர வாதம் செய்ய வேண்டும் என வலியு றுத்தி செவ்வாயன்று தொழில் பாது காப்பு, தொழிலாளர் வாழ்வுரிமை மாநாடு அரிசிக்கடை வீதியில் நடத்தப் படுகிறது. இம்மாநாட்டின் நோக்கத்தை விளக்கி திருப்பூர் மாவட்டத்தில் பல் வேறு பகுதிகளில் ஞாயிறன்று இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் மேற் கொள்ளப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் 15 வேலம் பாளையம் நகரக்குழு சார்பில் காலை யில் தண்ணீர் பந்தல் காலனி, ஆத்துப் பாளையம் சாலை, கலைவாணி தியேட்டர் சாலை, பெரியார் காலனி பேருந்து நிறுத்தம், சாமிநாதபுரம் ரேசன்  கடை அருகில், அ. புதூர், திலகர் நகர்,  அனுப்பர்பாளையம் ஆகிய எட்டு மையங்களிலும், மாலையில் வேலம் பாளையம், புதுக்காலனி, பிடிஆர் நகர்,  சாமுண்டிபுரம், சிறுபூலுவபட்டி, காவிலிபாளையம், ரங்கநாதபுரம் ஆகிய ஏழு மையங்களிலும் என மொத்தம் 15 மையங்களில் இந்த பிரச் சாரம் செய்யப்பட்டது. 

கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் தலைமை யில் நடைபெற்ற இப்பயணத்தில், மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், நகரச் செயலாளர் ச.நந்த கோபால், நகரக் குழு உறுப்பினர்கள் அ. ஆறுமுகம், அ.உமாநாத், ஆர்.சுகுமார்,  பி.பாபு, ர.கவிதா, பி.ரகுபதி, பி.சின்னச் சாமி, த.நாகராஜன், பி.நவபாலன் ஆகி யோர் உள்பட கிளைச் செயலாளர்கள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண் டனர். அதேபோல், மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் பிப்ரவரி  14ஆம் தேதி நடத்தும் தொழில் பாது காப்பு மாநாட்டை விளக்கி பிரச்சாரப்  பயணம் ஞாயிறன்று பெரியண்டி பாளையத்தில் துவங்கி, ஹவுசிங் யூனிட்டில் நிறைவு செய்யப்பட்டு  பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்ன தாக இடுவாய், மங்கலம், முருகம்பா ளையம், இடுவம்பாளையம், வீர பாண்டி, நல்லூர், விஜயாபுரம், முதலி பாளையம், சிட்கோ உள்பட மொத்தம்  22 இடங்களில் இந்த பிரச்சாரம் நடை பெற்றது.

இந்த பிரச்சார இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், ஒன்றிய செய லாளர் சி.மூர்த்தி, மாவட்ட குழு உறுப் பினர்கள் கே.கணேசன், பி.லட்சுமி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சி. சுப்பிரமணியன், ஈ.அங்குலட்சுமி, கே. வேலுச்சாமி, த.உமாசங்கர், எஸ்.ரவிச் சந்திரன், பி.கருப்புசாமி, ஆர்.செல்வ குமார், எஸ்.சண்முகம், எஸ்.குண சேகர், மகேஷ், எஸ்.ஜானகி, பொதுத்  தொழிலாளர் சங்க நிர்வாகி சண்முகம்,  கட்டுமான சங்க நிர்வாகி எம்.எஸ்.பிச்சை உள்ளிட்டோர் மாநாட்டு செய்தி யை மக்களிடம் பிரச்சாரம் செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநகரக்குழு  சார்பில்  கே.வி.ஆர்.நகர், செல்லம்நகர் பிரிவு,  கருவம்பாளையம், கல்லம்பாளையம்,  குமரன் சிலை, மிஷின் வீதி, வெங்க டேஸ்வரா நகர், புஷ்பா நகர், சிடிசி  கார்னர், கரட்டாங்காடு, பட்டுக் கோட்டையார் நகர், தென்னம் பாளையம் காலனி, வெள்ளியங்காடு நால் ரோடு, வெள்ளியங்காடு தெற்கு,  தென்னம்பாளையம், ஆர்.வி.ஈ.லே அவுட்,  சந்தைப்பேட்டை ஆகிய 17  மையங்களில் பிரச்சாரம் செய்யப் பட்டது.

இதில், கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.ராஜகோபால், மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், மாநகரக்குழு உறுப்பினர்கள் பி.பாலன், ஞானசேகர், பானுமதி, செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். திருப்பூர் வடக்கு ஒன்றியத்தில் பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், பாண்டியன் நகர், நெருப்பெரிச்சல், வாவிபாளையம், செட்டிபாளையம், அங்கேரிபாளையம், வெங்கமேடு உள்பட 20 மையங்களில் பிரச்சாரம்  செய்யப்பட்டது. இதில் கட்சியின்  மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், ஒன்றியச் செயலாளர் ஆர். காளியப்பன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் ஆர்.மைதிலி, ஆ.சிகாமணி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இளங்கோ, பாண்டியன், கோபால், வசந்தி, பானுமதி, மகாலிங்கம், கருப்ப சாமி, சந்தோஷ், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.அருள் உள் ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். பல்லடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட  பள்ளிபாளையம், அய்யன் கோயில்,  சாமளாபுரம், லட்சுமி மில், காளிவேலம் பட்டி,  மாணிக்காபுரம், கல்லம்பாளை யம், 63 வேலம்பாளையம் உள்ளிட்ட விசைத்தறி ஜவுளித் தொழில், பிராய்லர் கோழிப்பண்ணை தொழில் உள்ள  20 மையங்களில் மார்க்சிஸ்ட் கட்சி யின் பிரச்சார இயக்கம் ஞாயிறன்று நடைபெற்றது.

இதில் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதனன்,  பனியன் தொழிற்சங்க பொதுச் செய லாளர் ஜி.சம்பத், மார்க்சிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரம சிவம், கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் கள் ராஜேந்திரன், முருகேசன் மற்றும் இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பிரவீன் உள்ளிட்டோர் பங் கேற்று மாநாட்டு செய்திகளை விளக்கி  உரையாற்றினர். ஊத்துக்குளி தாலுகா, ச.பெரிய பாளையம், கூலிபாளையம் நால்ரோடு,  குளத்துப்பாளையம் பிரிவு, வெள்ளி யம்பாளையம் ஆகிய பகுதியில் சனி யன்று தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்றது. பெரியபாளையம் கட்சி கிளைச் செயலாளர் ஆ.மேகநாதன் தலை மையில் நடைபெற்ற இந்தப் பிரச்சார இயக்கத்தில் பனியன் தொழிலாளர் சங்க செயலாளர் ஜி.சம்பத், சி.பி.எம்.  தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்த சாமி, தாலுகா குழு உறுப்பினர் ஆர்.மணியன், மூத்த தோழர்கள் நடராஜ், பொன்னுச்சாமி, லட்சுமி உட்பட திரளா னவர்கள் கலந்து கொண்டனர்.