தருமபுரி, ஜன.25- ஒகேனக்கல் 2 ஆவது கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரி விக்கும் கர்நாடக பாஜக அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் தருமபுரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒகேனக்கல் 2 ஆவது கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.4 ஆயிரத்து 600 கோடி மதிப்பீட்டில் தொடங்கப் படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், இந்தத் திட்டத்தை நிறை வேற்றவிட மாட்டோம் என கர்நா டக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருப்பதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. குறிப்பாக, தமிழக மக்களின் குடி நீர்த் தேவைக்காக உருவாக்கப் படும் இந்தத் திட்டத்தை எதிர்ப் பது முற்றிலும் நியாயமற்றதாகும். ஆகவே,தமிழக அரசு தனக்குள்ள உரிமையின்படி இந்தத் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி யினர் தருமபுரி பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபி எம் மாவட்ட செயலாளர் ஏ.குமார் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.சிசுபாலன், எஸ்.கிரை ஸாமேரி, வே.விசுவநாதன், தரும புரி நகரச் செயலாளர் ஆர்.ஜோ சுபாசு, ஒன்றிய செயலாளர்கள் தரு மபுரி என்.கந்தசாமி, நல்லம் பள்ளி எஸ்.எஸ்.சின்னராஜ், காரி மங்கலம் பி.ஜெயராமன், இண்டூர் பிரகாசம், பென்னாகரம் ரவி, பாப்பாரப்பட்டி ஆர்.சின்னசாமி, மாவட்டகுழு உறுப்பினர்கள் டி.எஸ்.ராமச்சந்திரன், கே.குப்பு சாமி, வழக்கறிஞர் டி.மாதையன், ஏ.ஜெயா, பி.ஜீவானந்தம் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.