districts

img

இந்தி திணிப்பு - சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஏப்.20-  இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையில் இணைப்பு மொழியாக இந்தியை திணிக்க முயல்வதைக் கண்டித்தும், பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு நடத்து வதை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி யது. திருப்பூர் மாநகராட்சி அலுவல கத்திற்கு எதிரில் செவ்வாயன்று நடைபெற்ற இப்போராட்டத்திற்கு கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.மைதிலி, வடக்கு மாநகரச் செயலா ளர் பி.ஆர்.கணேசன், தெற்கு மாந கரச் செயலாளர் டி.ஜெயபால், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இந்த போராட்டத்தில் மாவட் டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன் உள்பட நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு நகர கமிட்டியின் சார்பில் செவ்வாயன்று சூரம்பட்டி பேருந்து நிறுத்தத்தின் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு கட்சியின் நகர கமிட்டி உறுப்பினர் என்.எஸ்.ரவி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.ஆர்.விஜயராகவன், மாநில குழு உறுப்பினர் ஆர்.பத்ரி ஆகியோர் கண்டன உரையாற் றினர். இதில், மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  எஸ்.சுப்ரமணியன், சி.பரமசிவம், சி.முருகேசன் நகர செயலாளர் பி.சுந்தரராஜன், நகர கமிட்டி உறுப்பினர்கள் வை.பாண்டி யன், சி.கே.முருகேசன், ஆர்.ரங்க நாதன் உள்ளிட்ட 70க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். ஆர்ப் பாட்டத்தை நகர கமிட்டி உறுப்பி னர் பொன் பாரதி நன்றி கூறி முடித்து வைத்தார். அதேபோல், ஈரோடு தாலுகா கமிட்டி சார்பில் மூலப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் புத னன்று காலை என்.பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  சி.முருகே சன் கண்டன உரையாற்றினார்.

பென்னாகரம் 

பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பென்னாகரம் பகுதி செயலாளர் ரவி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் இரா.சிசுபாலன், பென்னாகரம் கிழக்கு ஒன்றிய செய லாளர் ஜி.சக்திவேல், ஏரியூர் ஒன் றிய செயலாளர் என்.பி.முருகன், பென்னாகரம் நகர செயலாளர் எழி லரசு, பாப்பாரப்பட்டி பகுதி செய லாளர் சின்னசாமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் அன்பு ஜீவானந் தம், எம்.குமார், சி.ராஜி செல்லன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் கே.ஜி.கரூர், பால் உற்பத் தியாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் பி.எம்.கதீர் உள்ளிட் டோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன உரை யாற்றினர். தொடர்ந்து இந்தியை திணிக்கும் மோடி அரசை கண் டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி னர்.

சேலம்

சேலம், ஓமலூர் பேருந்து நிலை யம் முன்பு எம்.சின்ராஜ் தலை மையில் நடைபெற்ற கண்டன ஆர்ப் பாட்டத்தில், ஓமலூர் தாலுகா செய லாளர் என்.ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதேபோல் சங்க கிரி பேருந்து நிலையம் முன்பு சங் ககிரி தாலுகா செயலாளர் எ.ஆறு முகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செய லாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.சேகர் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். நங்கவள்ளி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் கே.ராஜாத்தி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.குணசேகரன் பங்கேற்றார். பெத்தநாயக்கன் பாளையம் பேருந்து நிலையம் முன்பு இடை கமிட்டி உறுப்பினர் பெருமாள் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. ராம மூர்த்தி, பெத்தநாயக்கன்பாளை யம் இடைக்கமிட்டி செயலாளர் காளிதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.

நாமக்கல்

குமாரபாளையத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர குழு உறுப்பினர் தோழர் ஜி.சண்முகம் தலைமையில் நடை பெற்றது இதில் கட்சியின் நகர செய லாளர் என். சக்திவேல் மாவட்ட குழு உறுப்பினர் எம்.ஆர்.முருகே சன் நகர குழு உறுப்பினர்கள் எஸ்.கந்தசாமி என். காளியப்பன் எஸ்.சரவணன் ஜி. மாதேஷ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.