districts

img

‘வட்டிக்கு மேல் வட்டி’ போட்டு வீட்டை அபகரிக்கும் முயற்சி

சேலம், செப்.12- வட்டிக்கு மேல் வட்டி போட்டு, வீடுகளை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் தனி யார் நிதி நிறுவனத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பூட்டுபோடும் போராட் டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் எக்விடாஸ் மைக்ரோ பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம், குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாகக்கூறி அப் பாவி மக்களின் வீட்டை அடமானம் பெற் றுள்ளனர். தற்போது வட்டிக்கு மேல் வட்டி போட்டு மக்களை கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளி, வீடுகளை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவ தாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். மேலும், இதே நிறுவனத்தில் கடன் வாங் கிய திருச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்ப வமும் நடந்துள்ளது. மேலும், இந்த நிதி நிறு வனத்தின் மேலாளர் சரவணன் மற்றும் சௌந் தர் ஆகியோர் மக்களிடம், 3 லட்சத்து 50  ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பவர் பத்தி ரத்தை தருவதாக ஒப்புக்கொண்டனர்.  தற்போது ஆறு லட்சம் ரூபாய் தந்தால்தான்  பத்திரத்தை திரும்பத்தர முடியும் என  கூறுவது சரியான நடவடிக்கை இல்லை. சேலம் நீதிமன்ற உத்தரவு எதுவும் இல் லாமல் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடுவது  சரியில்லை என பொதுமக்கள் வலியு றுத்தியும், வாங்கிய கடனுக்காக வீடுகளை அபகரிக்கும் நடவடிக்கையை இந்த நிதி நிறு வனம் மேற்கொண்டு வருகிறது. இதனைக் கண்டித்தும், தமிழ்நாட்டில் நுண் நிதி நிறுவனங்களிடம் சிக்கி சீரழியும் குடும் பங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எடப்பாடி தாலுக் காக்குழு உறுப்பினர் கே.நடராஜன் தலைமை யில் நிதி நிறுவனத்திற்கு பூட்டுபோடும் போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முக ராஜா, எடப்பாடி தாலுக்காச் செயலாளர் மு. பெரியண்ணன், கொங்கணாபுரம் ஒன்றியச் செயலாளர் எஸ்.முத்துசாமி, நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர் கே.ராஜாத்தி உட்பட பாதிக்கப்பட்ட மக்கள் பலர் கலந்து கொண் டனர்.