சேலம், அக்.18- பொதுகழிவறைகளை முறை யாக பராமரிக்க தவறிய சேலம் மாநக ராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகராட்சி, 26 ஆவது வார்டுக்குட்பட்ட சாமிநாதபுரம் பகுதி யில் பொது கழிப்பிடத்தை பராமரிக்க வும், சாலை, சாக்கடை கால்வாய் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும். பெரிய கிணறு தெருவில் செயல்பட்டு வந்த பிறப்பு இறப்பு பதிவு செய்யும் அலுவலகத்தை அதே இடத்தில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சேலம் மாந கராட்சி அலுவலகம் முன்பு மல சட்டி யுடன் மனு கொடுக்கும் போராட்டத் தில் ஈடுபட்டனர். இந்த இயக்கத்திற்கு கட்சியின் சேலம் வடக்கு மாநகரச் செய லாளர் என்.பிரவீன்குமார் தலைமை வகித்தார். இதில் மாநகரக்குழு உறுப் பினர் வெங்கடேஷ் உட்பட அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்ட னர். இதன்பின் மாநகராட்சி அலுவ லகத்தில் கோரிக்கைகளை அடங் கிய மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில், சாமிநாதபுரம் மற் றும் அந்தோணிசாமி தெரு, முனியப் பன் கோவில் தெரு, கிறிஸ்டியன் பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று பொது கழிவறைகளையும் முறையாக பராமரித்து மக்கள் பயன் பாட்டிற்கு வழங்க வேண்டும். சாக் கடை கால்வாயில் எண்ணெய் ஆலை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண் டும். மாநகரில் தெருநாய், கொசு தொல்லை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தப்பட்டுள்ளது.