districts

img

அமராவதி சர்க்கரை ஆலைக்கு ரூ.80 கோடி வழங்கி  புத்துயிரூட்ட முதல்வருக்கு சிபிஎம் கடிதம்

திருப்பூர், மார்ச் 5-  அமராவதி சர்க்கரை ஆலை பராமரிப்பு பணிக்களுக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கி,  கரும்பு அரவையை தொடங்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்து கண்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்து கண்ணன் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர்  வாயிலாக தமிழ்நாடு முதல்வருக்கு அனுப் பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,  மடத்துக்குளம் வட்டம் அமராவதி கூட்டுறவு  சர்க்கரை ஆலை தமிழ்நாட்டில் தொடங்கப் பட்ட முதலாவது கூட்டுறவு சர்க்கரை ஆலை  ஆகும். 60 ஆண்டுகளுக்கு மேல் பாரம்ப ரியம் மிக்க இந்த சர்க்கரைஆலை அண்மைக்  காலமாக பராமரிப்பு இல்லாமல் முழு உற் பத்தி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு வரு கிறது. நடப்பு ஆண்டுக்கான சர்க்கரை  அரவை இந்த மாதம் இரண்டாவது வாரத்தில்  துவங்கப்பட வேண்டும்.ஆனால் முன்னதாக  டிசம்பர் மாதமே தொடங்கி இருக்க வேண்டிய ஆலைப் பராமரிப்புப் பணிகள் தொடங்கப் படாததால் இந்த ஆண்டு ஆலை இயக்கப்ப டாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆலை இயக்கத்தின்போது உரிய  பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி ஆலை  இயக்கம் நிறுத்தப்பட்டதும், விவசாயிகள் பதிவு செய்திருந்த கரும்புகள் காய்ந்து பிழிதி றன் குறைந்தும், மொத்த உற்பத்தியை எடுக்க  முடியாமல் சுமார் ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. எனவே நடப்பு ஆண்டில்  இந்த ஆலையை முழுமையாக சீரமைக்க  வேண்டும். அப்போதுதான் முழுமையாக கரும்பு அரவை செய்து இழப்பைத் தவிர்க்க  முடியும். அதற்கு பராமரிப்பு நிதி ரூ.80  கோடி வழங்க வேண்டும் என்று கரும்பு விவ சாயிகள் வலியுறுத்தினர். எனினும் தமிழக அரசு பராமரிப்பு நிதி வழங்கவில்லை. அத்து டன் நடப்பு ஆண்டில் அரவைக்குப் பதிவு செய் திருந்த 1500 ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப் பட்டு வரும் 55 ஆயிரம் டன் கரும்பில், 14 ஆயிரம் டன் கரும்பை மோகனூர் சர்க்கரை  ஆலைக்கு அனுப்ப ஒதுக்கீடு செய்துள்ளது. அதேசமயம், மாநில அரசு அமராவதி வழி வகைக் கடனாக ரூ.6 கோடியே 75லட்சம் ஒதுக் கியுள்ளது. இது பராமரிப்புப் பணிகளுக்கு போதாது. பிரதான எந்திர பகுதிகள்  (கனை யம்), கரும்பு அரைக்கும் இடம், கரும்பு எடுத்துச் செல்லக் கூடிய கன்வேயர், கரும்பு பதப்படுத்தும் பாய்லர்கள் மற்றும் இதர பகு திகளை கொண்டு செல்லும் குழாய்கள், உற் பத்தி துறையில் இருக்கக்கூடிய சர்க்கரை அரவை  இயந்திரங்கள் உட்பட அனைத்து  பாகங்களையும் பராமரிப்பு மேற்கொள்ள ரூ. 80 கோடி தேவை. இந்நிலையில், தமிழக அரசு  இந்த ஆண்டு நிதி நிலையில் அமராவதி ஆலை பராமரிப்புக்கு நிதி ஒதுக்காததால் கரும்பு விவசாயிகள் ஏமாற்றம் அடைந் துள்ளனர். ஒன்றிய, மாநில அரசுகள் பொதுத் துறை நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகை யில், இந்த மாவட்டத்தில் இருக்கும் அமரா வதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உடனடி யாக நிதி ஒதுக்கி ஆலை இயக்கத்தை உறு திப்படுத்த வேண்டும். அத்துடன் கரும்புக்கு  உரிய விலை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க  வேண்டும். ஆலையைப் பராமரிப்புச் செய்ய நிதி  ஒதுக்காததும், மோகனூர் சர்க்கரை ஆலைக்கு இப்பகுதியில் விளைந்த கரும்பு களை அனுப்புவதும், இந்த கூட்டுறவு சர்க் கரை ஆலையை தொடர்ந்து இயக்காமல் முடக்கப்பட்டுவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆலை பராமரிப்பு நிதி ரூ.80 கோடியை உடனடியாக ஒதுக்கி, பராமரிப்புப் பணியைத்  தொடங்கி, கரும்பு அரவை செய்வதன் மூலம்  அமராவதி சர்க்கரை ஆலைக்கு புத்துயிரூட்ட  தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க  வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.