நாமக்கல், அக்.10- கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு இன்சூரன்ஸ்க்கு பணம் செலுத்தாத வங்கிக்கு அபரா தம் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அருகே உள்ள தேவனாங் குறிச்சி வசித்து வருபவர் எஸ்.குமார். இவர் ஹரிணி இம்பக்ஸ் என்ற பெய ரில் ஜவுளி தொழில் செய்து வந்தார். ஈரோட்டில் உள்ள டிசிபி வங்கியில் தொழில் அபிவிருத்திக்காக கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.10 லட்சம் கடன் பெற்றுள்ளார். தொழில் பாதுகாப்புக்கு இன்சூ ரன்ஸ் பாலிசி ஒன்றை எடுக்க வேண் டும் என கூறிய வங்கி நிர்வாகம் குமா ரின் கணக்கிலிருந்து ரூ.35 ஆயி ரத்து 535யை, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரீமி யம் தொகையாக பிடித்தம் செய் துள்ளனர். ஆனால், பல மாதங்கள் கடந்தும் பாலிசி வராததால் வங் கியை தொடர்பு கொண்ட போது, பணத்தைப் பிடித்து ஐசிஐசிஐ லம் போர்ட் நிறுவனத்தில் செலுத்தி விட்டோம் என்றும், இனிமேல் அங்கு தான் பாலிசி வராதது குறித்து கேட் டுக் கொள்ள வேண்டும் என முர ணாக பதில் தெரிவித்துள்ளனர். இந் நிலையில், முழு கடனையும் வங் கிக்கு செலுத்திய குமார் கணக்கில் பணம் எடுத்துக் கொண்ட பிறகும் இன்சூரன்ஸ் பாலிசி வழங்காதது குறித்து 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வழக்கறிஞர் மூலம் நோட் டீஸ் அனுப்பியுள்ளார். இதனையடுத்து, உடனடியாக வங்கிக்கணக்கில் பிடித்தம் செய் யப்பட்ட ரூ.35,535ஐ டிமாண்ட் டிராப் டாக டிசிபி வங்கி நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து, வங்கி தன்னை ஏமாற்றியதாக கூறி குமார், கடந்த 2021 ஆம் ஆண்டில் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத் தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வீ.ராமராஜ் மற்றும் உறுப்பினர் ஏ. எஸ்.ரத்தினசாமி ஆகியோர் திங்க ளன்று வழங்கிய தீர்ப்பில், வங்கி செயல்பட்டுள்ள விதம் சேவை குறை பாடு என தெரிவித்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு பிடித்தம் செய்த பணத்தை 2021ஆம் ஆண்டு வழக் கறிஞர் நோட்டீஸ் மூலம் கேட்டவு டனே வங்கி திருப்பி கொடுத்துள் ளது. இந்த பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பெற்று வழங்கிய தற்கு எவ்வித ஆதாரத்தையும் வங்கி சமர்ப்பிக்கவில்லை. இதன் மூலம் வாடிக்கையாளரிடம் பணத்தைப் பிடித்துக் கொண்டு இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு முறையாக பணத்தை வங்கி செலுத்த தவறி யது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, வழக்கு தாக்கல் செய்த வருக்கு நான்கு வார காலத்துக்குள் இழப்பீடாக ரூ. 2 லட்சமும், வழக்கு செலவு தொகையாக ரூ.20 ஆயிர மும் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. நான்கு வார காலத்துக்குள் செலுத்த தவறினால் ஏற்படும் கால தாமத்திற்கு ஆண்டொன்று ஒன்பது சதவிகித வட்டியுடன் சேர்த்து வழங் குமாறு உத்தரவில் கூறப்பட்டுள் ளது.