districts

கடன் வழங்க முடியாது என சொல்ல 3 ஆண்டுகளா?

நாமக்கல், ஜன.11- கடன் வழங்க முடியாது என மூன்று  ஆண்டுகள் கழித்து வாடிக்கையாள ரிடம் தெரிவித்த தனியார் வங்கிக்கு ரூ.25  ஆயிரம் இழப்பீடு செலுத்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், வேல கவுண் டன்பட்டி அருகே உள்ள கொத்தூரில் வசிப்பவர் முருகேசன் (46).  இவர்  மைசூரில் உள்ள தனியார் நிறுவனத் தில் பணியற்றிவந்தார். 2019-ஆம்  ஆண்டில் மைசூரில் உள்ள ஐசிஐசிஐ    ஹோம் பைனான்ஸ் கிளை மேலாளரை  அணுகி வீடு கட்ட இடம் வாங்குவதற்கு கடன் விண்ணப்பித்துள்ளார். கடன்  வழங்குவதாக கூறிய வங்கி நிர்வாகம்  பிராசசிங் கட்டணம் ரூ.3,540 செலுத்து மாறு நிறுவன மேலாளர் தெரிவித்துள் ளார். மேலும், அனைத்து ஆவணங்க ளையும் சமர்ப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பலமுறை கடன் கேட்டு அலைந்தும், தாமதம் செய்து வந்துள்ள னர். மீண்டும் முருகேசன் மேலாளரை சந்தித்து கடன் வழங்குமாறு கேட்ட போது, புதிய விதிமுறைகளின் படி கடன்  வழங்க இயலாது என தெரிவித்துள் ளார். இதன் பிறகு கடன் கேட்டு செய்த  விண்ணப்பத்தின் நிலையை தெரிவிக்கு மாறு கடிதம் எழுதியும் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் எவ்வித பதிலை யும் தரவில்லை. பதில் வராததால் தமக்கு கடன் தரவில்லை என்றால்,  செலுத்திய பிராசசிங் கட்டணத்தையும்,  ஆவணங்களையும் கேட்டு முருகேசன் கடிதம் அனுப்பி உள்ளார்.  இதற்கு சுமார் மூன்று ஆண்டுகள்  கழித்து, கடன் கேட்ட விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. இது சேவை குறை பாடு என்று கடன் கேட்டவர் நாமக்கல்  மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத் தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். விசாரணை முடிவடைந்த நிலையில் புத னன்று நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வீ. ராமராஜ் மற்றும் உறுப்பினர் ஆர். ரமோலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். ஒருவருக்கு கடன் வழங்குவதும் வழங் காததும் நிறுவனத்தின் விருப்பம் என்ப தால், கடன் வழங்காததை சேவை குறை பாடு என கூற முடியாது. ஆனால், கடன்  விண்ணப்பத்தையும் கட்டணத்தையும் பெற்றுக் கொண்டு மூன்று ஆண்டுகள்  கழித்து கடன் வழங்க இயலாது என்று  நிறுவனம் கூறுவது   சேவை குறைபாடு  என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இத னால் முருகேசன் செலுத்திய சேவை கட்டணத்தில் ரூ.2 ஆயிரத்தையும், சேவை குறைபாட்டிற்கான இழப்பீ டாக ரூ.25 ஆயிரத்தையும் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் வழக்கு தாக்கல்  செய்தவருக்கு நான்கு வாரங்களுக் குள் வழங்க வேண்டும் என்று நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.