districts

img

அநீதியை எதிர்க்கும் துணிவை அறிவின் மூலம் பெற வேண்டும்

உடுமலை, செப்.27- அநீதியை எதிர்க்கும் துணிவை அறிவின் மூலம் பெற வேண்டும் என உடுமலை அரசு கல்லூரியில் நடைபெற்ற பட்டமேற்பு விழா வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித் தார்.                                   உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூ ரியில் 47 ஆவது பட்டமேற்பு விழா செவ்வா யன்று நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் பேராசிரியர் சோ.கி.கல்யாணி பட்டமேற்பு விழாவிற்கு தலைமை தாங்கினார். இதில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி னார்.  இதனைத்தொடர்ந்து அவர் பேசுகை யில், “கல்வித்துறையில் முன்னேறிய இந்திய  மாநிலங்களுள் முதன்மையான மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. தமிழகக் கல்வி வளர்ச் சிக்கான அடித்தளம் இரண்டாயிரம் ஆண்டு  பாரம்பரியத்தைக் கொண்டது. உலகில் வேறு  எந்த மொழியிலும் இல்லாத அளவில் 46  பெண் படைப்பாளர்கள் சங்ககாலத்தில் இருந் துள்ளனர். தமிழகக் கல்வி வரலாற்றில் நில விய ஆண்,பெண் சமத்துவத்தை இது காட்டு கிறது. 

மாணவர்கள் இதுவரை தேர்வை மனதில்  கொண்டு படித்து எழுதி வந்தார்கள். இன்று  பட்டங்களைப் பெறும் அவர்கள் சுதந்திர மாகச் சிந்தித்துச் சமூகத்தை மனதில் கொண்டு அவர்களுடைய வாழ்வை  அமைத் துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் எந்தத்  துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தேர்ந்தெடுக்கும் துறையில் உள்ள வாய்ப்பு களைக் கண்டுணர்ந்து மாணவர்கள் வாழ்க் கையை வளப்படுத்திக்கொள்ள வேண்டும்.   இந்தியாவின் மிகப்பெரும் பலம் மொத்த  மக்கள் தொகையில் ஏறக்குறைய 50 சதவிகி தம் பேர் 25வயதுக்கும் குறைவானவர்களாக இருப்பதுதான். இந்த மனித வளத்தை நாம்  மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வயதானவர்களைக் காட்டிலும் இளையவர்களும், சிறியவர்களும் தொழில் நுட்பத்தை மிகவேகமாகக் கற்றுக்கொள் ளும் ஆற்றல் பெற்றவர்களாகத் திகழ்கின்ற னர். நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் நம் வீட்டையும், நாட்டையும் உயர்த்த முடியும். இளைஞர்கள், தொலைத் தொடர்பு சாத னங்களை வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் பயன்படுத்தக் கூடாது.  கைப்பேசி, மடிக்கணினி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்களை அறிவுப் பெருக்கத்துக்கான ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும். உட னுக்குடன் பரவும் செய்திகளும், தகவல்க ளும் இளைஞர்களிடையே பெரும் மனக் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. ஊடகங்கள் பரப்பும் செய்திகள் மற்றும் விவாதங்களில் இருந்து உண்மைகைளை மட்டும் கண்டுண ரும் அறிவுத் தெளிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கல்வியறிவின் துணைகொண்டு அறத் தோடும், நேர்மையோடும் வாழவேண்டும். அநீதியை எதிர்க்கும் துணிவினை அறிவின் மூலம் பெறவேண்டும். உள்ளத்தையும், உடம்பினையும் பக்குவப்படுத்துவதுதான் பட்டம் பெறுவதின் நோக்கமாகும். வெற்றி யைக் கண்டு மயங்காமலும் தோல்வியைக்  கண்டு துவழாமல் இருக்கின்ற மன நிலையை  ஒவ்வொருவரும் பெறவேண்டும். பெரும்  போட்டிகளும், சவால்களும் நிறைந்த  உலகத்தில் நமக்கான வாய்ப்புகளை நாம்  உருவாக்கிக்கொள்ள வேண்டும். வாழ்வில்  முன்னேறும்விருப்பத்துக்கும், கனவுக்கும்  வேறுபாடு உண்டு. கல்வி,வேலை என்று  படிக்கட்டுகளில் ஏறி முன்னேறுங்கள்.  ஆனால் உங்கள் கனவுகளுக்கான படிக் கட்டுகளை வேறெவரும் உருவாக்கி யிருக்க மாட்டார்கள். நீங்கள் தான் உருவாக்க  வேண்டும்.  படிப்பு, பட்டம், வேலைவாய்ப்பு என்பன வற்றையும் தாண்டி சமூக மாற்றத்தையும், சமூக முன்னேற்றத்தையும் மனதில் கொண்டு  இயங்க வேண்டும். மொத்தத்தில் அறிவின் துணைகொண்டு நேர்மையாகப் பயணித்து  ஒவ்வொரு இளைஞர்களும் பெரும் கனவு களை நிஜமாக்கிக் கொள்ள வேண்டும், என் றார். பட்டமேற்பு விழாவில், பல்வேறு துறை களைச் சேர்ந்த 581 மாணவர்களுக்கு இள நிலைப் பட்டங்களும், 210  மாணவர்களுக்கு முதுநிலைப் பட்டங்களும் என மொத்தம் 791 மாணவ-மாணவியருக்கு பட்டங்கள்  வழங்கப்பட்டன. பல்கலைக்கழக அளவில்  சிறப்பிடம்பெற்றவர்களுக்குப் பதக்கங் களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.