கோபி, ஜன.30- தூய்மைப் பணியில் மெத்தனபோக்கை கடைபிடிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கோபிசெட்டிபாளையம் நகராட்சி கவுன்சி லர்கள் கூட்டத்தில் புகார் எழுப்பியதால் பர பரப்பு ஏற்பட்டது. ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபா ளையம் நகராட்சியில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் நாகராஜ் தலை மையில் ஆணையாளர் சசிகலா முன்னிலை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக, அதிமுக வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் பங்கேற்றனர். முன்னதாக கூட்டத்தில் நிறை வேற்றப்படும் தீர்மானங்கள் ஒப்புதல் பெற வாசிக்கப்பட்டது. அப்போது, நகராட்சி பகுதி களில் தூய்மை பணிகளில் அனைத்து வார்டு களிலும் குப்பைகள் அதிகளவில் தேங்குகி றது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்திக் கின்றனர். நாள்தோரும் கவுன்சிலர்களிடம் புகார் தெரிவிக்கின்றனர். கவுன்சிலர்கள் நக ராட்சி ஆணையாளர் மற்றும் நகர் மன்ற தலைவரிடம் புகார் தெரிவித்தும் தூய்மைப் பணி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. எனவே, தூய்மை பணிகளை முறையாக மேற்கொள்ளாத அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க தீர்மா னம் கொண்டு வர வேண்டும் என வார்டு கவுன்சிலர்கள் புகார் எழுப்பினர். மேலும், நக ராட்சியில் புதிய ஒப்பந்தப் பணிகளை மேற் கொள்ளும்போது நகராட்சி பொறியாளர் கவுன்சிலர்களுக்கு எவ்வித தகவல்களும் அளிப்பதில்லை என குற்றசாட்டு தெரிவித்த னர்.