சேலம், மே 31- உடையாப்பட்டி மின் பொது கட்டுமான வட்ட நிர்வாகத்தின் விதிமீறல் மோசடி, ஊழலை கண்டித்து சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், உடையாப்பட்டியில் இயங்கிவரும் செயற்பொறியாளர் மின் பகிர்மான பொது கட்டுமான வட்டத்தில் எட்டு பதவிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலை யில், திருப்பத்தூரில் பணி செய்து வந்த ஒரு சிறப்பு நிலை முகவர் நிர்வாகத்தால் காட் பாடி துணை மின் நிலைய அமைப்பிற்கு ஊர் மாறுதல் செய்யப்பட்டார். வேலூர் மாவட்டத்தில் இருந்து நிர்வா கத்தால் ஒரு சிறப்பு நிலை முகவர் கிருஷ்ண கிரி பிரிவுக்கு ஊர் மாறுதல் செய்யப்பட் டார். இந்த இரண்டு ஊர் மாறுதலும் தவறு என்று தொழிற்சங்கம் மூலம் நிர்வாகத்திற்கு புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனாலும், சேலம் பொது கட்டுமான வட்ட நிர்வாகம், வாரிய உத்தரவுக்கு எதிராக முறைகேடாக லஞ்சம் பெற்றுக் கொண்டு ஊர் மாறுதல் உத்தரவு வழங்கியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, ஊர் மாறுதலில் வாரிய விதி மீறல், பதவி உயர்வு வழங்குதலில் இட ஒதுக் கீடு பின்பற்றப்படாமல் அநீதிகள் இழைத் தல், மின் ஊழியர்களின் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தாத மெத்தன போக்கு ஆகி யவற்றை கண்டித்து திங்களன்று சிஐடியு பிரி வின் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. இதில் சிஐடியு மின் பகிர்மான வட்ட கிளை செயலாளர் ரகுபதி, தலைவர் கருப் பண்ணன் உள்ளிட்டு எண்ணற்றோர் பங் கேற்றனர்.