திருப்பூர், ஜூன் 29 - திருப்பூர் மாநகராட்சி சின்னச்சாமி அம்மாள் மேல் நிலைப்பள்ளி நுழை வாயிலில் வண்டிப்பேட்டை என சமூக விரோதிகளால் குதர்க்கமாக எழுதி வைக்கப் பட்டுள்ளது. பள்ளியின் மதிப்பை குறைக்கும் வகை யில் முகப்பு பகுதியிலேயே இது போல் எழுதி வைக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியும் அதை அழிப்பதற்கோ, எழுதி வைத்தவர்கள் மீது நட வடிக்கை எடுப்பதற்கோ பள்ளி நிர்வாகம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. திருப்பூர் மாநகராட்சி கொங்கு மெயின் ரோடு பகுதியில் சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி நுழைவாயில் முகப் பில் இருபுறமும் தூண்களில் வண்டிப் பேட்டை என ஆங்கிலத்தில் காவி நிறத்தில் எழுதி வைத்துள்ளனர். மேலும் அந்தத் தூண்களின் மேலே வி, பி என கொட்டை எழுத்துகளில் எழுதி வைத்துள்ளனர். இது போல் எழுதி வைத்து ஒரு வார காலமாகியும் பள்ளி முகப்பில் இதை யார் எழுதியது என்று விசாரிப்பதற்கோ, இதுபோல் எழுதி வைத்ததை அழிப்பதற்கோ, பள்ளி தலைமை ஆசிரியர், மேலாண்மை குழு என யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக, இப்பள்ளிக்கு முன்புறம் இருக்கும் நடைமேடை பகுதியில் வாடகை வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு வாகன நிறுத்தமாக பயன்படுத்தும் நிலை யில், அதற்கு தனியாக பெயர் பலகை எழுதி வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பள்ளிக்கூடத்தை வண்டிப்பேட்டை என எழுதி வைத்திருப்பது மாணவர்களுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பள்ளிகளுக்கு அருகாமைப் பகுதிகளில் சமூக விரோதிகள் மாணவர் களை பயன்படுத்தி போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இப்பகுதியில் உள்ள சமூக விரோதிகள் மாண வர்கள் கல்வி கற்கும் பள்ளியின் மதிப்பை குலைக்கும் விதத்தில் இதுபோல் செய்து இருக்கின்றனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம், பள்ளி யின் மதிப்பை சீர்குலைக்கும் நடவடிக்கை களை தடுத்து நிறுத்தவும், பாதுகாப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர் பார்க்கின்றனர்.