சேலம், டிச.10- அகில இந்திய முழுவ தும் உள்ள பல்வேறு கோரிக் கைகளை முன்வைத்து, வரும் காலத்தில் காலவரை யற்ற வேலைநிறுத்த போராட் டத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், லாரி உரிமையாளர் சங்கத்தின் 75 ஆம் ஆண்டு பவள விழா, இருபாலைப் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சேலம் மாவட்ட லாரி உரி மையாளர்கள் சங்கத்தின் தலைவரும், மாநில சம்மேளன தலைவருமான தனராஜ் தலைமை வகித்தார். இந்த விழாவில் அகில இந்திய மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்மு கப்பா, டெல்லி அகில இந்திய மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் தலைவர் மதன், தெலுங் கானா மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் துணைத் தலைவர் ஜவகர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து முக்கிய பொறுப் பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பவள விழாக் கூட் டத்தில் லாரி உரிமையாளர்கள் சந்திக் கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து, அகில இந்திய மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா செய்தியாளர்க ளிடம் பேசுகையில், தமிழகத்தில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வரியை கட்டச் சொல்லி வற்புறுத்துவதை குறைக்க வேண் டும் என்றார். மேலும் அகில இந்திய முழுவ தும் உள்ள பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் எனவும் அவர் கூறினார்.