districts

img

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.க்கு பதிப்புரிமை விருது

கோவை, ஜன.2- மரபணுக்களை ஆராயும் மென்பொ ருளை உருவாக்கியதற்காக, தமிழ்நாடு  வேளாண்மைப் பல்கலைக்கழகத் துக்கு பதிப்புரிமை விருது வழங்கப்பட் டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்க லைக்கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் துறையின் முதுகலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியுடன் மரபணுக் களை ஆராயும் மென்பொருள் (நெக்ஸாஹப்) உருவாக்கினர். இதற் காக கணினி மென்பொருள் பதிப்பு ரிமை விருதைப் பெற்றுள்ளனர்.  இந்திய அரசின் பதிப்புரிமை அலு வலகம் இந்த பதிப்புரிமையை வழங்கி யுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக  துணைவேந்தர், பதிப்புரிமை திட்டத்தில் பணியாற்றிய அனைத்து விஞ்ஞானிகளையும் பாராட்டி, பதிப்புரிமைச் சான்றிதழை வழங்கினார்.