districts

img

குன்னூர்: இறைச்சி கழிவுகள் மூலம் உரம் தயாரிப்பு

உதகை, ஜன.18- தமிழகத்தில் முதல்முறை யாக குன்னூரில் கோழி மற்றும் மீன் கழிவுகளில் இருந்து உரம்  தயாரிக்கும் பணிகள் நடைபெற்று  வருகின்றது. குன்னூர் பொதுமக்கள் குப் பைகளை ஆறுகளிலும், ஓடைகளி லும் வீசி வந்தனர். இதனால் வன  விலங்குகளின் குடிநீர் கடுமை யாக மாசடைந்து வந்தது. அது மட்டுமின்றி குன்னூர் ஓட்டுப்பட் டறை அருகே நகரில் தினசரி சேக ரிக்கப்படும் குப்பைகள் அனைத் தும் மலைபோல் குவிக்கப்பட்டு, துர்நாற்றம் வீசி வந்த நகராட்சி குப்பை குழியால், அந்த பகுதி யில் குடியிருக்கும் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதைய டுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து குப்பைமேடாக இருந்த இடத்தை சுத்தம் செய்து கழிவு மேலாண்மை பூங்காவாக மாற்றினர். குன்னூர் நகராட்சியில் சேகரிக்கப்படும் மக் கும் குப்பை மற்றும் மக்கா குப்பை கள் என பிரிக்கப்பட்டு, பேலிங்  இயந்திரம் மூலம் ‘பிளாஸ்டிக் பேக்கேஜ்’ செய்து. பர்னஸ் ஆயில் தயாரிக்க அனுப்பப்படுகிறது.

குன் னூர் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிக ளில் இருந்து கோழிக்கழிவுகள், மீன்கழிவுகள் கொண்டு செல்லப் பட்டாலும், மறுசுழற்சிக்கு பயன்ப டுத்தாமல் குழி தோண்டி புதைக் கும் நிலை உள்ளது. சில இடங்க ளில் வனப்பகுதிகளில் கொட்டுவ தாலும் சுகாதாரம் பாதிப்படை கிறது. இந்நிலையில், குன்னூர் நக ராட்சி மற்றும் கிளீன் குன்னூர் என்ற தன்னார்வ அமைப்பினர் இணைந்து, இந்த கழிவுகளில் உரம் தயாரிக்கும் முயற்சி மேற் கொள்ளப்பட்டு, வெற்றி கண்டுள் ளனர். கோழி, மீன் கழிவுகளுடன் வாழைத்தார் உள்ளிட்ட நார்  கழிவுகளும் குறிப்பிட்ட வெப்ப நிலையில் அரைக்கப்படுகிறது. பிறகு காற்று, வெளிச்சம் உள்ள பகுதியில் விண்ட்ரோ எனப்படும் முறையில் பதப்படுத்தப்படுகிறது. மேலும், 30 நாட்கள் வரை குறிப் பிட்ட வெப்ப நிலையில் மாற்றி மாற்றி பதப்படுத்தப்பட்டு உர மாக மாற்றப்படுகிறது. இந்த முயற்சி தமிழகத்தில் முதல் முறை யாக நடத்தி வெற்றி காணப் பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இதன் தரம்  குறித்த சோதனைக்கு கோவை யில் உள்ள ஆய்வகத்துக்கு மாதிரி அனுப்பப்பட்டது. இதில், ஒன்றிய அரசின் பெர்டி லைசர் கன்ட்ரோல்  உத்தரவின் மதிப்பீட்டில், இந்த  உரம் முதல் கிரேடு பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு ஆர்கானிக் எனும் இயற்கையான உரமாக  வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் நிதி தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது, என நக ராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.