உடுமலை, பிப்.23- உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் வினியோகஸ் தரான செல்வி கேஸ் ஏஜென்சீஸ் சார்பாக சமையல் எரிவாயு பாதுகாப்பு மற்றும் செயல் விளக்க பயிற்சி முகாம் நடை பெற்றது. இந்த முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா தலைமை வகித்தார். உடுமலை பாரத் கேஸ் வினியோகஸ்தர் செல்வி கேஸ் ஏஜென்சி உரிமையாளர் அய்யப்பன், தமிழ் ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சின்னராசு அனைவரையும் வரவேற்றார். பள்ளி மாணவியர் எளிய முறையில் சமையல் எரிவாயு பயன்படுத் துவது குறித்தும், இணையம் முறையில் பதிவு செய்வதது குறித்தும், எரிவாயுவை கவனமாக கையாளுவது குறித்தும், எரிவாயு பாதுகாப்பு சிக்கனம் குறித்தும் செல்வி கேஸ் ஏஜென் சீஸ் உரிமையாளர் எம்.பி அய்யப்பன் விளக்கி பேசினார். தொடர்ந்து கேஸ் எவ்வாறு சிக்கனமாகப் பயன்படுத்த வேண் டும் என்பது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. சமையல் எரிவாயு குறித்த கேள்விகளுக்கு சரியான முறை யில் விடை அளித்த மாணவிகளுக்கு புத்தகம் பரிசளிக்கப்பட் டது. தன்னம்பிக்கை குறித்து வானொலி தங்கவேல் மாணவி யர்களிடையே உரையாற்றினார்.