ஈரோடு, நவ.12- பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை கொங்கு பொறியி யல் கல்லூரியின் 36 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி யின் கொங்கு பல்கலை மையத்தில் அண்மையில் நடை பெற்றது. இவ்விழாவில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் கல் லூரிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்டம் அளிக் கப்பட்டது. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல் கலைக்கழகத்தின் துணைவேந்தர் டி.கிருஷ்ணன் இவ் விழாவின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பட்டங்க ளையும், பதக்கங்களையும் வழங்கினார். மொத்தம் 1913 பட்டதாரிகள் (இளங்கலை: 1593, முதுகலை:320) பட்டம் பெற்றனர். மேலும், இவ்விழாவில், படிப்பில் சிறந்து விளங்கிய 126 பேருக்கு (இளங்கலை: 109, முது கலை: 17) பதக்கங்களும் வழங்கப்பட்டன. கொங்கு வேளாளர் தொழில்நுட்பக்கல்வி அறக்கட்டளையின் தலைவர் ஆர்.குமாரசாமி, கல்லூரியின் தாளாளர் ஏ.கே.இளங்கோ, அறக்கட்டளையின் பாரம்பரிய உறுப்பினர்கள், முதல்வர் வீ.பாலுசாமி பல்வேறு துறை களின் தலைவர்கள் மற்றும் கல்லூரியின் பல்வேறு அமைப்புகளின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர். உதகை இதேபோன்று, நீலகிரி மாவட்டம் கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி 18 ஆவது பட்டமளிப்பு விழா கல் லூரியில் நடைபெற்றது. இதில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு பட்டங் கள் வழங்கப்பட்டன. கல்லூரியின் தலைவர் திமோதி ரவீந்தர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில், இயக்குனர் அருமைராஜ், கல்லூரி தாளாளர் காட்வின் ஆர்.டேனியல் மற்றும் சிஎஸ்ஐ கோயம்புத்தூர் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரமு கர்கள், முதல்வர், துணை முதல்வர், டீன் மற்றும் பல் வேறு துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.