கோவை, நவ.3- கோவை ஸ்ரீகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் நடை பெற்ற 33 ஆவது பட்டமளிப்பு விழாவில், ஒன்றிய இணை யமைச்சர் சுபாஷ் சர்கார் கலந்து கொண்டார். கோவை மாவட்டம், கோவைப்புதூர் பகுதியிலுள்ள ஸ்ரீகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் 33 ஆவது பட்ட மளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஒன்றிய கல்வி இணை யமைச்சர் சுபாஷ் சர்கார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 1,037 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில் சித்தூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் பாலசுப்ரமணியம், ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி, நிர்வாக அறங்காவலர் ஆதித்யா, கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.