கழிவு பஞ்சு விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துக
மறுசுழற்சி மில்கள் வேலைநிறுத்தம்
சூலூர், ஜூலை 11- கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஸ்பின்னிங் மில்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்ததை தொடர்ந்து, கழிவுப் பஞ்சுகளில் மறுசுழற்சி செய்து நூல் தயாரிக்கும் மில்களின் ஜவுளி கூட்டமைப்பும் வேலை நிறுத்த போராட் டத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கூட்டமைப்பு அறி வித்துள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அருகில் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு சார்பில் தலைவர் ஜெயபால், பத்திரிக்கை யாளர்களிடம் கூறியதாவது, கழிவுப் பஞ்சுயை மீண்டும் மறு சுழற்சி செய்து கிரே மற்றும் கலர் நூல்கள் உற்பத்தி செய்யப் படுகிறது. கடந்த பத்து மாதங்களாக 50 சதவிகிதத்தில் இருந்த விலை 75 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இதனால், ஸ்பின்னிங் மில்களில் ஜவுளிகளின் மீட்டர் விலை ரூ.200 முதல் ரூ.4000 மேல் விற்பனை செய்ய வேண்டி உள்ளது. ஆனால் கழிவுப் பஞ்சுகளில் உற்பத்தி செய்யப்படும் காடாவுக்கு மீட்டர் ரூ.28 முதல் ரூ.50 வரை விற்க வேண்டிய சூழல் ஏற்படும். இந்நிலையில், 75 சதவிகித விலை உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. மின் கட்டணமும் உயர்ந்து உள்ளது. மேலும், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மறுசுழற்சி செய்யும் மில்கள் அதிக அளவில் உருவாகி வருகிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. முதலீட்டு பொருட் களின் விலையால் உயர்வால் சுழற்சி செய்யப்படும் நூல் களில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கும் விலை அதிகளவு வைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் நடுத்தர மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். தற்போது 170 மில்கள் இந்த வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் களிடம் கோரிக்கை அளித்துள்ளோம். எனவே தமிழ்நாடு அரசு, மறுசுழற்சி செய்யும் மில் கூட்டமைப்பினரை அழைத்துப் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என் றார்.
பணம், கொடுக்கல் வாங்கல் தகராறு தாய், மகளுக்கு கத்திக்குத்து
கோவை, ஜூலை 11- பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் தாய், மகளை கத்தி யால் குத்திய சமையல்காரரை போலீசார் கைது செய் தனர். கோவை, ஒண்டிப்புதூர் காமாட்சி புரத்தை சேர்ந்தவர் பாபு மனைவி ஜெயந்தி (38). இவர் அதேபகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வரு கிறார். ஜெயந்தி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சமை யல்காரர் ஆறுமுகம் (67) என்பவரிடம் கடன் வாங்கியிருந்த தாகவும், அது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திங்களன்று காலை ஜெயந்தி வேலைக்கு செல்வதற்காக தனது தாயாருடன் சிங்காநல்லூரில் உள்ள ஒரு மில் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது, அங்கு நின்றிருந்த ஆறுமுகம், ஜெயந்தி யிடம் தன்னிடம் வாங்கிய பணத்தை கொடுக்குமாறு கேட் டுள்ளார். அதற்கு ஜெயந்தி, நான் ஏற்கனவே ரூ.5 ஆயிரம் கொடுத்து விட்டேன் என தெரிவித்துள்ளார். இதனால், அவர்களுக் கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திர மடைந்த ஆறுமுகம் தகாத வார்த்தைகளால் பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயந்தியின் இடுப்பில் குத்தினார். தடுக்க முயன்ற அவரது தாயாருக்கும் கத்தி குத்து விழுந்தது. இதையடுத்து, ஆறுமுகம் தப்பி ஓடி விட்டார். பின்னர் கத்தி குத்தில் காயமடைந்த ஜெயந்தி, அவரது தாயா ரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கப் பட்டது. புகாரின் பேரில் போலீசார், கொலை மிரட்டல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சமையல்காரர் ஆறுமுகத்தை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத் தனர்.
கோவையில் 14 ஆம் தேதி சர்வதேச வேளாண் கண்காட்சி
கோவை, ஜூலை 11- இந்தியாவின் முதன்மையான வேளாண் வணிக கண்காட்சிகளில் ஒன்றான அக்ரி இன்டெக்ஸ்- 2023 வேளாண் கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் ஜூலை 14 ஆம் தேதியன்று துவங்க உள்ளது. 21 ஆவது பதிப்பாக நடை பெறும் இந்த கண்காட்சியை தமிழ் நாடு வேளாண்மை உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி, மது விலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் சு.முத்துச் சாமி ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர். இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு வேளாண் பல்கலை கழகத் தில் நடைபெற்றது. இதில் கண் காட்சியின் தலைவர் தினேஷ் குமார், கொடிசியா தலைவர் திரு ஞானம் மற்றும் கோவை தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழக துணை வேந்தர் வே.கீதா லட்சுமி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறு கையில், 21வது பதிப்பாக நடை பெறும் விவசாய கண்காட்சி, 14 ஆம் தேதியன்று துவங்கி 17ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடை பெற உள்ளது. துல்லிய வேளாண் மை மற்றும் நுண் நீர் பாசனம் மூலம் இந்திய வேளாண்மையில் மாற் றங்களை உருவாக்குதல் என்ற நோக்கத்தில் நடைபெற உள்ள கண் காட்சியில் இதில், கொரியா, இஸ்ரேல், ஜப்பான், ஸ்வீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந் தும், மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ஆந்திரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங் களில் இருந்தும் நவீன தொழில் நுட்பம் சார்ந்த வேளாண் சார்ந்த நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர். சுமார் 450க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற உள்ள இக் கண்காட்சியில், நவீன ட்ரோன் கருவிகள், ஆட்டோமேசன், சூரிய ஒளி பம்புகள், நுண் நீர்ப்பாசனம், துல்லியப் பண்ணை, பண்ணை இயந்திரமயமாக்கல், குறைந்த நீர் பயன்பாட்டு விவசாய முறைகள், மதிப்பு கூட்டுதல் மற்றும் கால் நடை வளர்ப்பு தானியங்கி முறை கள், கூட்டுப்மதிப்புக் பொருள்கள், அறுவடைக்குப் பின் தொழில் நுட்பம், வேளாண் சந்தை, உள்ளிட்ட சிறப்புக் தொழில்நுட்பங் களுக்குச் கவனம் அளிக்கப்பட உள்ளது. மேலும், வேளாண் இயந்தி ரங்கள், உபகரணங்கள், பாசனக் கருவிகள், கால்நடைப் பராமரிப்பு, வேலிகள், எடைக் கருவிகள், பம்புகள், உரம், விதை உள்ளிட்ட பல்வேறு வகையான வேளாண் சார்ந்த பொருட்கள் இடம்பெற உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து வேளாண் நிபுணர்கள், உணவுப் பதப்படுத்தும் தொழில் துறையினர், இடுபொருள், விதை உற்பத்தியாளர்கள், முதலீட்டாளர் கள், விநியோகஸ்தர்கள், ஆராய்ச்சியாளர்கள், வங்கியாளர் கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இந்த மாபெரும் வேளாண் கண்காட்சியில் பங் கேற்க உள்ளதாக தெரிவித்தனர்.
100 நாள் வேலை திட்டத்தில் பணித்துணையாளர்களை மாற்ற பரிந்துரை
திருப்பூர், ஜூலை 11 - பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி யில் நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் மீது விசாரணை மேற்கொண்ட மாவட்ட திட்ட குறைதீர்ப்பாளர் மூன்று பணித்துணையாளர் களை மாற்றுவதற்கு பரிந்துரைத்தார். விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆனந்தராஜ் கொடுத்த புகார் மனுவின் மீது மாவட்ட நூறு நாள் வேலை திட்ட குறைதீர்ப்பாளர் பிரேமலதா விசாரணை மேற்கொண் டார். இந்த விசாரணை நடத்தியதில், ஆனந்தராஜ் புகார்கள் ஏற்கப்பட்டது. இதன்படி பணித்துணையாளர்கள் புனிதராணி, மகேஸ்வரி, ஜமுனா ஆகியோர் மாற்றப்பட்டு வேறு நபர்கள் பணித்துணையாளர்களாக வேலை செய்ய வேண்டும். இதனை ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச்சட்ட விதிமுறை களைப் பின்பற்றாமல் தொடர்ந்து பணியாற்றினால் இவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு இவர் பரிந்துரை செய்துள் ளார்.
திருப்பூரில் தமிழ்மொழி கற்போம் திட்டம்: பள்ளிக்கல்வி அமைச்சர் தொடக்கி வைத்தார்
திருப்பூர், ஜூலை 11 – புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் தாய்மொழி வழியாக தமிழ் மொழியை கற்கும் வகையில், “தமிழ் மொழி கற்போம்” திட்டத்தை மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தார். திருப்பூர் ஆத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் தமிழ் மொழி கற்போம் திட்டத் துவக்க விழா செவ்வாயன்று நடை பெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் யாமொழி பேசுகையில் கூறியதா வது: தமிழகத்தில் பல லட்சம் பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருக்கின்ற நிலையில் அவர்கள் நம் சகோதரர்கள் போல என வெறும் பேச்சளவில் தெரிவிக்காமல் அவர் களை அரவணைத்து நம் தாய் மொழியை அவர்களுக்கு வழங்குவ தற்காக துவங்கப்பட்ட உன்னத திட் டம் தமிழ் மொழி கற்போம் திட்டம். நம்மை நாடி வருவோருக்கு அவர்க ளது தாய் மொழியோடு நம் தாய் மொழியையும் கொடுப்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள் ளது. இதற்காக கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் ரூ.71.9 லட்சம் ஒதுக் கீடு செய்யப்பட்டது, என்றார். மேலும் சென்னைக்கு அடுத்த படியாக கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சி இருப்பதாக பாராட்டு தெரிவித்தார். மாநகராட்சி மண்டல தலைவர்கள், கவுன்சிலர் கள் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தி ருப்பதன் மூலம் மக்கள் அரசு பள்ளி களை நம்பி வருவதை உணர முடி கிறது. விரைவில் அனைவரின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்ப டும் என்று அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், சட்ட மன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அவமதித்த பாஜக: வெளியேறிய பத்திரிகையாளர்கள்
திருப்பூர், ஜூலை 11 - திருப்பூர் மாவட்டம் பல்ல டம் அருகே அருள்புரம் டிஆர்ஜி திருமண மண்டபத் தில் பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜக கிளை நிர்வாகி கள் ஆய்வுக்கூட்டம் என்று நடத்தப்பட்ட இந்த நிகழ்ச் சிக்கு பத்திரிகையாளர் களைத் தொடர்ந்து வற்பு றுத்தி பாஜக நிர்வாகிகள் அழைத்துள்ளனர். அதை தொடர்ந்து பத்திரிகையா ளர்கள் அங்கு சென்றுள்ள னர். நிகழ்ச்சி தொடங்கியவு டன், உள்ளே போய் பத்திரி கையாளர் வீடியோ எடுக்கும் பொழுது, மாவட்டத் தலை வர் செந்தில்வேல், பத்திரி கையாளர்களை மரியாதை குறைவாக வெளியே போ என்று விரட்டியிருக்கிறார். இதனால் மொத்த பத்திரி கையாளர்களும் இந்த கூட் டத்தைக் கண்டித்து வெளி நடப்பு செய்தனர்.'
ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தல்
உதகை, ஜூலை 11- ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிட வேண் டும் என வலியுறுத்தி சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் உள்ளனர். தற்போது ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி வாகன ஓட்டுநர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்ப தாவது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா வாகன ஓட்டு நர்கள் வாழ்வாதாரம் இழந்து குடும்பத்தை காப்பாற்ற முடி யாத நிலையில் உள்ளனர். சுற்றுலா வாகனங்களை தணிக்கை செய்யாமலே, செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து போலீ சார் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கின்றனர். அபராதம் விதித்த பின்னர் தான் குறுஞ்செய்தி மூலம் உரிமை யாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு இந்த தகவல் தெரிய வருகிறது. அதன்பின் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பம் ஏற்படுகிறது. கடந்த காலங்களில் வாகனங்களை போலீசார் தணிக்கை செய்யும் போது, ஆவணங்களை சரிபார்த்த பின்னர், தவறு கள் ஏதாவது இருந்தால் அதற்கு ஏற்றார் போல் அபராதம் விதிப்பார்கள். தற்போது போலீசாரின் விருப்பத்திற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே, இனி போலீசார் வாகன தணிக்கை செய்து அப்போது ஆவணங்கள் ஏதும் இல்லா விட்டால் மட்டும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும். மேலும், ஓட்டுநர்களிடம் போலீசார் ஒரு மையில் பேசுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜேடர்பாளையம் அணைக்கட்டில் குளிக்க தடை
ஜேடர்பாளையம் அணைக்கட்டில் குளிக்க தடை நாமக்கல், ஜூலை 11- அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால், ஜேடர் பாளையம் அணைக்கட்டில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையம், பள்ளிபாளை யம், ஜேடர்பாளையம், பரமத்திவேலுார், மோகனுார் வழி யாக காவிரி ஆறு சென்றாலும், இடையில் சுற்றுலாத்தலம் இல்லாமல் இருப்பது, ஒரு குறையாகவே இருந்து வந்தது. கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஜேடர்பாளையம் அணைக்கட்டுப் பகுதியில் பொதுப்பணித்துறை பூங்கா அமைக் கப்பட்டது. மேலும், செயற்கை நீரூற்று, குழந்தைகள் விளை யாடக்கூடிய சாதனங்கள் போன்றவையும் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் ஏராளமான சுற் றுலா பயணிகள் இங்கு வந்து, பூங்காவில் பொழுதை குதூ கலமாக கழித்து, ஜேடர்பாளையம் அணைக்கட்டில் குளித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதி மற்றும் அதனை ஒட்டி யுள்ள ராஜா வாய்க்காலில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வாய்க்கால் மற்றும் அணைக்கட்டு பகுதியில் குளிக்கும் இளைஞர்கள் நீரில் மூழ்கி இறக்கின்ற னர். கடந்த மாதம் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இது அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், அங்கு குடிபோதையில் இளைஞர்கள் குளிக்க வருவதால், அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, பொது மக்களின் நலன் கருதி, தற்காலிகமாக ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் குளிக்க தடை விதித் துள்ளனர். ஜேடர்பாளையம் அணைக்கட்டு பூங்காவிற்கு மட் டுமே பொதுமக்களுக்கு அனுமதி, குளிக்க அனுமதி கிடை யாது என்று பொதுப்பணித்துறை நிர்வாகம் அறிவித்துள் ளது.
சேலம் – சென்னை விமான சேவையை மீண்டும் துவங்க வலியுறுத்தல்
சேலம், ஜூலை 11- நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சேலம் - சென்னை விமான சேவையை விரைவில் மீண்டும் தொடங்க வேண்டும் என்று சேலத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குழு கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் விமான நிலைய ஆலோசனை குழுவின் 5 ஆவது கூட்டம் திங்களன்று நடைபெற்றது. ஆலோசனைக்குழு தலை வர் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தலைமை வகித்தார். இக்கூட் டத்தில், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள சேலம் - சென்னை விமான சேவையை மீண்டும் தொடங்க விமான போக்குவ ரத்து துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பனி மூட்டம் காலங்களில் விமானம் இறங்குவதற்கு வசதியாக டிவிஓஆர் என்கிற நவீன கருவியை நிறுவ வேண்டும் என்று கடந்த 4 கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதற்கான நடவடிக்கை இல்லை. எனவே, விரைவில் சேலம் விமான நிலையத்தில் டிவிஓஆர் கருவி பொருத்த வேண்டும். விமான போக்குவரத்தை விரிவுபடுத்தும் வகையில் சேலத்தி லிருந்து திருப்பதி வழியாக ஐதராபாத்துக்கு விமான சேவை தொடங்க வேண்டும். சேலத்திலிருந்து கொச்சிக்கும், சேலத்தி லிருந்து சென்னை வழியாக சீரடிக்கும் விமான போக்குவரத்து தொடங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதுகுறித்து சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் கூறுகையில், புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் விமான நிறுவனம், சேலத்திலிருந்து விமான சேவையை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சேலத்தில் இருந்து அதிகளவு விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு அவ ரவர் தாமாக முன் வந்து நிலம் கொடுப்பவர்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூடுதல் நிதி உதவி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இக்கூட்டத்தில் சேலம் விமான நிலைய இயக்குநர் ரமேஷ், ஆலோசனைக்குழு உறுப்பினர்களான மேட்டூர் உதவி ஆட்சி யர் தணிகாசலம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண் ணன், ஆய்வாளர் செல்வராஜன், தொழில் அதிபர்கள் அழக ரசன், ஹரிபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்களை தேடி மருத்துவம்: உலகிற்கே முன்மாதிரி
சேலம், ஜூலை 11- “மக்களை தேடி மருத்துவம்” என்ற மகத் தான திட்டம் உலகிற்கே முன்மாதிரியாக உள் ளது என சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி மேம் படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தில், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக “சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டம்” திங்களன்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சிறுநீரக பாதிப்பை தொடக்க நிலையில் கண்டறிந்தால் பாதிக் கப்பட்ட நபரை எளிதாக குணப்படுத்த இய லும். இதுவே, நோயின் தன்மை அதிகரித்து சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு விட்டால் டயா லிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு நிலைக்குச் செல்ல வேண் டிய சூழல் ஏற்படும். தமிழ்நாட்டில் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு பலர் சிறுநீரக தானத்திற் காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்நிலை வருவதற்கு முன்பே அந்த நோயின் பாதிப்பை தடுக்க, “சிறுநீரகம் காக் கும் சீர்மிகு மருத்துவத் திட்டம்” என்ற சிறப் பான திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடி மதிப்பீட்டில் சிறுநீரக பாதிப்பு கண்டறியும் பரிசோதனை பெட்டகம் வழங்கப்படுகிறது. மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டம் மூலம் தற்போது வரை 1 கோடியே 54 ஆயிரம் நபர்கள் பயன்பெற்றுள்ளனர். கனடா நாட்டில் உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்ட மாநாட் டில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. இத் திட்டம் உலகத்திற்கே முன்மாதிரி திட்டமாக உள்ளது என்ற பாராட்டைப் பெற்றுள்ளது, என்றார்.
ரூ.11 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்
தருமபுரி, ஜூலை 11- தருமபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங் களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த அங்காடிக்கு திங்களன்று 2,512 கிலோ பட்டுக்கூடுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.525க்கு விற் பனையானது. மொத்தம் ரூ.11 லட்சத்து 12 ஆயிரத்து 851க்கு வர்த்தகம் நடைபெற்றது.
நாளை மின்தடை
நாமக்கல், ஜூலை 11- நாமக்கல், கபிலர்மலை துணை மின் நிலையத்தில் வியாழனன்று (நாளை) பரா மரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கபிலர்மலை, பாண்டமங் கலம், வெங்கரை, பிலிக்கல் பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப் பாளையம், சேளூர் செல்லப் பம் பாளையம், பெரியமரு தூர், சின்னமருதூர், பாகம் பாளையம், பெரியசோளிபா ளையம், கொளக்காட்டுப் புதூர், நெட்டையம்பாளை யம், எஸ்.கொந்தளம் ஆகிய பகுதிகளில் வியாழனன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.