ஈரோடு, ஜூலை 23- மணிப்பூர் முதல்வரை பதவி விலக வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூர் பழங்குடியின பெண் களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்த கயவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். கலவரத்தை கட்டுப் படுத்த முடியாத மாநில பாஜக முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பவானிசாகரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்க வட் டார செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செய லாளர் டி.சுப்பிரமணி, கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.பி.ராஜூ, பி.என். ராஜேந்திரன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் ரமேஷ் மற்றும் மாதர் சங்க வட்டாரச் செயலாளர் அருந்ததி ஆகியோர் கண் டன உரையாற்றினர். இதில், திரளா னோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். மோடி அரசின் மெத்தன போக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஊனாத்திபுதூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மூத்த தோழர் எம்.நாச்சிமுத்து தலைமை வகித்தார். தாலுகா செய லாளர் என்.பாலசுப்பிரமணி, மாவட் டக்குழு உறுப்பினர் பா. லலிதா, தாலுகா கமிட்டி உறுப்பினர் ப.அன்பு ஜனாதி பதி, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் என்.ரஞ்சித் குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்
மணிப்பூர் கலவரங்களை கட்டுப் படுத்த தவறும் பாஜக அரசை கண்டித்து திருப்பூர் மிஷின் வீதியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம், மாநகர குழு உறுப்பினர்கள் பா.ஞானசேகர், ஜி. செந்தில்குமார், கிளை செயலாளர்கள் எல்.சுந்தர்ராஜன், ஏ.செல்லமுத்து உட் பட பலர் பங்கேற்றனர்.
சேலம்
இதேபோல், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தேவி தலைமை ஏற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகர செயலாளர் பிரவீன் குமார், சேலம் மாநகர செயலாளர் கனகராஜ், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஜெகநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் குழந்தைவேல் நிறைவுரையாற்றினார். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பொன்.ரமணி, வி.இளங்கோ, மாதர் சங்க மாவட்டத் தலைவர் வைர மணி, பொருளாளர் பெருமா உள் ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதேபோல், பனமரத்துப்பட்டி பேருந்து நிலையம் முன்பு இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு என்.கண்ணன் தலைமை ஏற்றார். இதில் சிஐடியு ஏபிடி சங்க மாநில துணைத்தலைவர் செவந்தி யப்பன், வாலிபர் சங்க மாவட்டத் தலை வர் வி. ஜெகநாதன், ஒன்றியச் செய லாளர் ஜி.ஆர்.ஆனந்தன், எம்.கனக ராஜ், கே.சுரேஷ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
கோவை
இதேபோல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் பாஜக அரசைக் கண்டித்து சிங்கா நல்லூர் உழவர் சந்தை முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க சிங்கை நகரத் தலைவர் சனோஜ் தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் கே.பாரதி, மாதர் சங்க மாவட்ட பொருளாளர் உஷா, தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத்தலைவர் யு.கே. சிவஞானம், மாநில கல்வி பொதுப் பள்ளி மேடை கோவை ஒருங்கிணைப் பாளர் தெய்வேந்திரன், வாலிபர் சங்க மாவட்ட துணைத் தலைவர் மணிபாரதி, மாவட்டக் குழு உறுப்பினர் ஹெயில் மேரி, சிங்கை நகரப் பொருளாளர் தியாகு உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். இதேபோல், மழைவாழ் மக்கள் சங்கம், வாலிபர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் ஆனைமலை முக்கோணம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு சனி யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத் தின் கோவை மாவட்டத் தலைவர் ஜோதி மணி தலைமை வகித்தார். மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராஜ லட்சுமி, வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் சுரேஷ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனைமலை ஒன்றியச் செயலாளர் பரமசிவம் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப் பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.