districts

img

மாணவர்களின் கல்வியில் போக்குவரத்துத்துறையின் பங்களிப்பு

கோவை, ஆக. 16- மாணவர்கள் நகரத்திற்கு சென்று கல்வி கற்பதற்கு நமது போக்குவரத்துத்துறையின் பங்களிப்பு அளப்பரிய தாகும் என கோவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர்  சிவசங்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில்,  கோவையில், சுங்கம் போக்குவரத்து பணிமனையில் நடை பெற்ற நிகழ்வில் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்றார். இந் நிகழ்வில், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குதல்,  ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய் வறை திறப்பு நிகழ்ச்சி, கோவை மாவட்ட பணிமனை  அளவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்  பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு பாராட்டுச்  சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  மேலும், 27  பேருக்கு கருணை அடிப்படையில் பணியணை மற்றும்  மருதமலை, சுங்கம்1, சுங்கம்2 ஆகிய மூன்று கிளைகளில்  குளிரூட்டப்பட்ட ஓய்வறை, 50க்கும் மேற்பட்ட பணியாளர் களின் குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.  இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், கோவையில் மட்டும் போக்குவரத்து துறையில்  பாதிக்கப்பட்ட 550 பணியாளர்களின் குடும்பங்களுக்கு 145 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் போக்கு வரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை  இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இந்த ஆட்சிக்காலத்தில் ஊதிய  ஒப்பந்த பேச்சு வார்த்தை முடிக்கப்பட்டு தொழிளார்களுக்கு சம்பள உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து, மிகச் சிறப்பான ஒரு திட்டம், இத் திட்டத்திற்கு விடியல் பயணம் என்று பெயர் வைத்துள்ளோம்.  இதற்காக ஆண்டிற்கு 2500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்தியாவிலேயே மிகப்பெரிய துறையாக போக்கு வரத்து துறை உள்ளது. அனைத்து போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கும் பணியாளர்களை எடுக்க உள்ளது. இதற்கான அரசாணையை முதல்வர் அண்மையில் வெளி யிட்டிருந்தார். புதிய பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர்  விடப்பட்டு கூடிய விரைவில் புதிய பேருந்துகள் வரவுள்ளது.  புதிய பணியாளர்களை பணிக்கு எடுக்கும் பொழுது போக்கு வரத்து துறை மீண்டும் மறுமலர்ச்சி ஏற்படும். தமிழகம்  சமச்சீரான வளர்ச்சியை பெற்றுள்ளது. மாணவர்கள் அனைவரும் நகரத்திற்கு சென்று படிப்பை பெற்றுள் ளார்கள் என்றால் அது போக்குவரத்து துறையினால் தான்  என்றார். 

பணியிட மாறுதல் வேண்டும்

கோவை சுங்கம் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில், ஆறு மாத குழந்தையுடன் மேடைக்கு வந்த அரசு பேருந்து ஓட்டுநர்  கண்ணன் என்பவர், கைக்குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்து பணியிட மாறுதல் தொடர்பாக கோரிக்கை  விடுத்தார். இது குறித்து கண்ணன் கூறுகையில், எனது  சொந்த ஊர் தேனி என்றும் தனக்கு ஆறு வயதில் ஒரு  பெண் குழந்தையும், ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தையும்  உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி  டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இறந்து விட்டார். எனது இரண்டு  பெண் குழந்தைகளையும் பார்த்து கொள்ள தனக்கு சொந்த  ஊருக்கே பணியிட மாறுதல் வேண்டும். இதுகுறித்து  பலமுறை பொது மேலாளரிடம் கோரிக்கை விடுத்தும்  எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, அமைச்சரிடம் கோரிக்கை வைத்தாக கூறினார். இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், மேயர்  கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்டே துறை சார்ந்த அதிகாரி கள் பங்கேற்றனர்.