districts

img

கோவையின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணிப்பதா? ரயில்வேதுறைக்கு பி.ஆர்.நடராஜன் எம்பி., கண்டனம்

கோவை, ஏப்.5- கோவை மாவட்ட மக்களின் கோரிக்கை ளை, ஒன்றிய அரசும், ரயில்வே துறையும்  தொடர்ந்து புறக்கணிக்கிறது. அதேநேரத் தில், எளிய மக்களின் நிலையை உணராமல், அதிக கட்டணம் உள்ள வந்தே பாரத் போன்ற  ரயில்களை, தாங்கள் நினைப்பதை செய்ய வேண்டும் என்கிற முனைப்போடு ஒன்றிய பாஜக அரசு இயக்குகிறது என பி.ஆர்.நடரா ஜன் எம்.பி., குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளதாவது, கோவை  நகரம் ஸ்மார்ட் சிட்டி என அடையா ளப்படுத்தப்பட்டிருப்பதால், மக்களுக்கான அனைத்து விதமான போக்குவரத்து வசதிக ளையும் மேம்படுத்த வேண்டிய தேவை உள் ளது. கோவை - பெங்களூரு இடையே யான இரவு நேர ரயில் சேவை வசதி 2007  ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது. வர்த்தகர்கள், வியாபாரிகள், தொழில் முனைவோர்கள், ஐ.டி ஊழியர்கள், மாண வர்கள், பெங்களூருக்கு வேலைக்கு செல் லும் சாதாரண பொதுமக்கள் ஆகியோரின் வசதிக்காக இந்த இரவு நேர பெங்களூரு கோவை ரயிலை இயக்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறேன். 2007 ஆம்  ஆண்டு, அப்போதைய ரயில்வே துறை அமைச் சர், கோவை - பெங்களூரு இரவு நேர ரயில் சேவை வசதியை புதிதாக அறிவித்தார். அது அறிவிப்போடு மட்டுமே இருக்கிறது. ஒன் றிய பாஜக அரசும், ரயில்வே துறையும் இதுவ ரையில் இதற்கான எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளவில்லை.

 கோவை மாவட்ட மக்களின் ரயில்வே துறை சார்ந்த கோரிக்கைகள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டாலும், அது குறித்த எந்த அக்க றையும் இல்லாமலே ரயில்வே துறை உள் ளது. அதேநேரத்தில், ஏற்கனவே இருந்த பல  ரயில் சேவைகளையும் ஒன்றிய அரசு பறித்து  வருகிறது. உதாரணமாக, கோவை - சேலம்  பயணிகள் ரயிலை, இருப்பு பாதை பராமரிப்பு  என்ற பெயரில் மாதக்கணக்கில் நிறுத்தி வைத் துள்ளது. இதேபோன்று, டாலர் சிட்டி என  அழைக்கப்படுகிற திருப்பூரிலிருந்து சென் னைக்கு “ டாலர் சிட்டி” என்ற பெயரில் அறிமு கப்படுத்தப்பட வேண்டும். கோவை, சென்னை எக்மோர் ரயில் சேவை வழி போத்தனூர், பொள்ளாச்சி வழியாக ரயில்சேவை, தூத்துக் குடி, ராமேஸ்வரம் ரயில்சேவை, கோவையி லிருந்து சென்னை எக்மோருக்கு பொள் ளாச்சி வழியாக மேலும் ஒரு புதிய ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என் கிற கோரிக்கைகள் அனைத்தும் கிடப்பில் இருக்கிறது. வட கோவை ரயில் நிலை யத்தில், இரவு நேர ரயில்கள் நிற்காமல் செல் கிறது. இதனால், ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி, காந்திபுரம் மற்றும் கவுண்டம்பா ளையம் பகுதி மக்களுக்கு பெரிய இடையூ றாக உள்ளது. ஆகவே, இரவு நேர ரயில்கள் வடகோவை ரயில்நிலையத்தில் நின்று  செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அவை எதுவும் ஒன்றிய அரசோ, ரயில்வேது றையோ செவிசாய்க்காமல் உள்ளனர்.  அதேநேரத்தில், வந்தே பாரத் ரயில்களை இயக்குவதில் ஒன்றிய மோடி அரசு முனைப்பு காட்டுகிறது. எளிய மக்களுக்கு எந்தவி தத்திலும், பயணிக்க முடியாத அளவிற்கு  அபரிமிதமான கட்டணம் வசூலிக்கப்படு கிறது.  அதேநேரத்தில், கோவையில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த ரயில்க ளில், முன்பதிவற்ற பொது பெட்டிகள், இரண் டாம் வகுப்பு பெட்டிகள்  குறைக்கப் பட்டுள்ளது. ஒன்றிய மோடி அரசின் திட்டங் கள் எல்லாம் மக்களிடம் பணம் பறிக்கும் நடவ டிக்கையாக இருக்கிறது. ஏழை, எளிய  உழைப்பாளி மக்களின் நலன் சார்ந்த எந்த  கோரிக்கைகளையும் செவிமடுப்பதாக  இல்லை. ஆனால்,எதிர்க்கட்சிகள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்கிற திட்ட மிட்ட பொய்ப்பிரச்சாரத்தை பாஜகவினர் மேற்கொண்டு வருகின்றனர். பாஜகவினரின் இந்த நாடகத்தை கோவை மக்கள் நன்கு அறிந்தே உள்ளனர். கோவை மாவட்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேற் றப்படவில்லை என்றால், மக்களை திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.

;