districts

img

நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக.25- அவுட்சோர்சிங் முறையைக் கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு  நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சிஐடியு சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நுகர்பொருள் வாணிபக் கழகத் தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளர் கூலி உயர்வை உடனே வழங்க வேண் டும். நவீன அரிசி ஆலைகளை தனி யார்மயம் ஆக்கக்கூடாது. அவுட் சோர்சிங் முறையைக் கைவிட வேண் டும். பொது விநியோக முறையை  பலப்படுத்துவதுடன், ரேசன் கடைக ளுக்கு அனுப்பும் பொருட்கள் எடை குறைவில்லாமல் தரமான பொருட் கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் (சிஐடியு) சங் கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் - பல்லடம் சாலை, பழைய மாவட்ட ஆட்சியரக வளா கத்தில் உள்ள டிஎன்சிஎஸ்சி மண்டல அலுவலகம் முன்பாக சங்கத்தின்  மண்டலத் தலைவர் சோ.செஞ்சுடர் மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டலச் செயலா ளர் எஸ்.மணிமாறன் தொடக்கி வைத் தார். மாநில துணைப் பொதுச்செய லாளர் ஆர்.மோகன், சிஐடியு மாநி லக்குழு உறுப்பினர் ஜி.சம்பத், சிஐ டியு மாவட்டத் துணைத்தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரை யாற்றினர். பொருளாளர் கே.செந்தில் குமார் நன்றி கூறினார். கோவை கோவை மாவட்டம், கவுண்டம் பாளையம் நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தின் முன்பு தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கிளை துணைத்தலைவர் ஞானவேல் தலைமை வகித்தார். இதில், மாநிலப்  பொருளாளர் எம்.ஏழுமலை சிறப்பு ரையாற்றினார்.