நாமக்கல், ஜூன் 9- நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறை தண் டனை அளிக்கலாம் என நீதிபதி தெரிவித் துள்ளார். நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் பணம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்ட வழக்குகளில் தீர்ப்பை நிறைவேற்ற கோரி யவர்களும், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் இரு நூறுக்கும் மேற்பட்டோர் களுக்கு சமரச மையத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஜூன்15 ஆம் தேதி வரு மாறு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சமரச பேச்சுவார்த்தைக்காக பரமத்தி வேலூர் ராமலிங்கம், திருச்செங் கோடு பாலசுப்ரமணியம், நாமக்கல் அய்யாவு, குமரேசன், சதீஷ்குமார், முரளி குமார், அந்தோணி புஷ்பதாஸ் மற்றும் சந்திர சேகர் ஆகிய வழக்கறிஞர்கள் மத்தியஸ் தர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், பாதிக்கப்பட்ட நுகர் வோருக்கு பணத்தை செலுத்தாத நபர்களை கைது செய்ய கோரி உத்தரவிட்ட வழக்கு களில் நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட காவல் துறை ஆய்வாளர்களுக்கு கைது ஆணை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப் பிரிவு 72 ன்– படி, நுகர்வோர் நீதிமன்ற உத்தரவு களை அமல்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க நுகர்வோர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, ராசிபுரம் அருகே உள்ள கவுண்டம்பாளை யத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் என்ப வருக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கிய இழப்பீட்டுத் தொகை ரூ.55 ஆயிரத்திற்கான காசோலையை நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ் வழங்கினார்.