வேளாண் பல்கலை.,யில் நாளை கலந்தாய்வு
கோவை, நவ.8- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இள மறிவியல் பட்டப்படிப்புக் கான நேரடி கலந்தாய்வு நவ.10 ஆம் தேதியன்று (நாளை) நடைபெற உள் ளது. நேரடி கலந்தாய்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாண வர்களின் பட்டியல் https://tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் பதிவிடப்பட்டுள்ளது. இத் தகவல் மாணவர்களது மின் னஞ்சல் முகவரி, அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
காய்ந்த மரக்கிளைகளை தூளாக்கி அதே மரத்திற்கு உரமாக்கும் முயற்சி
கோவை, நவ.8- கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மரங்களில் உள்ள காய்ந்த மரக்கிளைகளை அகற்றி, இயந்திரம் மூலம் துகள்களாக்கி அதே மரங்களுக்கு உரமாக்கும் பணி தீவிர மாக நடைபெற்று வருகிறது. கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பாக வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக கோவை யில் சாலையோரம் உள்ள மரங்களில் காய்ந்த மரக்கிளைகள், விழும் நிலையில் உள்ள மரங்கள் போன்றவைகள் அகற்றப் பட்டு வருகின்றன. கோவை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்ட லங்களிலும், மண்டலத்திற்கு ஒரு டிராக்டர் மற்றும் மரக்கிளை களை துகள்களாக்கும் இயந்திரம் ரோந்து செல்கின்றன. அப்போது காய்ந்த மரக்கிளைகள், இலைகள் போன்ற வற்றை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி அந்த இயந்திரத் தில் போடுகின்றனர். உடனடியாக மரக்கிளைகள், இலைகள் துகள்களாக மாறுகின்றன. இந்த துகள்கள் அனைத்தும் அதே மரத்திற்கு உரமாக போடப்படுகின்றன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தனி யார் அமைப்புடன் இணைந்து இந்த டிராக்டர் மற்றும் இயந் திரங்கள் மாநகராட்சிக்கு பெறப்பட்டன. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையின் போது முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக இதுபோன்று விழும் தருவாயில் உள்ள மரக் கிளைகள் அகற்றப்பட்டு, அதே மரத்திற்கு உரமாக இடப் படுகிறது, என்றனர்.
ஆபரண தயாரிப்பு பயிற்சி
ஈரோடு, நவ. 7- சத்தியமங்கலம் வட்டா ரத்தில், கொமராபாளையம் ஊராட்சியில் உள்ள எம்.ஜி. ஆர்.நகர் பகுதியில் வசிக்கும் விளிம்பு நிலையில் உள்ள நரிக்குறவர் பெண்களுக்கு ஆபரணம் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது. கிராம சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் சுமார் சுமார் 3 வாரங்கள் நடைபெற்றது. இப்பயிற்சி யில் பெண்களுக்கான வளை யல், பாசி வகைகள், தோடு வகைகள் போன்ற ஆபரண வகைகள் தயாரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயற்சியின் முடித்தமைக் கான ஒவ்வொரு பயிற்சியா ளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நவம்பர் புரட்சி நாள் கொடியேற்றம்
திருப்பூர், நவ.8 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 15.வேலம்பாளையம் நகரக் குழு சார்பில், அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், சாமுண்டிபுரம் ஆகிய பகுதிகளில் திங்களன்று நவம்பர் புரட்சி தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் நகரச் செயலாளர் ச.நந்தகோபால், நகரக் குழு உறுப்பினர்கள் அ.ஆறுமுகம், அ.உமாநாத், கிளைச் செயலா ளர்கள் வெள்ளிங்கிரி, சரவணக்குமார், சிவராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பள்ளி சத்துணவுக் கூடத்திற்குள் பாம்பு
அவிநாசி, நவ.8¬- சேவூர் அருகே சாலைப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி சத்துணவுக் கூடத்திற்குள் புகுந்த பாம்பை சமூக ஆர்வலர் விஜய் பிடித்து வனப் பகுதிக்கு எடுத்து சென்றார். அவிநாசி வட்டம், சேவூர் ஊராட்சி சாலையப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 200க்கும் மேற் பட்டோர் பயின்று வருகின்றனர். இங்கு உள்ள சத்துணவு கூடத்திற்குள் திங்கள்கிழமை மதியம் திடீரென 3 அடி நீள முள்ள பாம்பு புகுந்தது. இதைப்பார்த்த சத்துணவு பணியாளர் கள், சமூக ஆர்வலரும், பாம்பு பிடிப்பதில் பழக்கப்பட்டவரு மான விஜய்க்கு தகவல் அளித்தனர். இதையறிந்து அவி நாசியில் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த, அவர் உரிய பாதுகாப்பான முறையில் பாம்பை பிடித்து, வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றார்.
நகை பறிப்பு
திருப்பூர், நவ.8- பல்லடம் வடுகபாளை யத்தைச் ஜானகி (56. கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக் கர வாகனத்தில் ஞாயிற் றுக்கிழமை சென்று கொண்டி ருந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் ஜானகி அணிந்தி ருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
ஓடை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தமிழக முதலமைச்சருக்கு தபால்
திருப்பூர், நவ.8 - அரசுக்கு சொந்தமான ஓடை புறம் போக்கில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச் சர் முக. ஸ்டாலின் அவர்களுக்கு தபால் மூலம் மனு அனுப்பப்பட்டுள்ளது. விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதா வது: திருப்பூர் மாவட்டம், வடக்கு சட்ட மன்ற தொகுதி, அவிநாசி தாலுகா, சொக் கனூர் ஊராட்சியை சேர்ந்த காட்டுப்பா ளையம் பகுதியில் 296/2 அரசுக்கு சொந் தமான ஓடை புறம்போக்கு நிலத்தில் குட்டை உள்ளது. இந்த குட்டை அவி நாசி அத்திக்கடவு திட்டத்தில் சேர்க்கப் பட்டள்ளது. மேலும் நீர் நிரப்புவதற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு நீர் உறிஞ்சு வதற்கு மோட்டார் பம்பு செட்டு வைக்கப் பட்டு சோலார் சூரிய ஒளி தகடுகளும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த குட்டையில் ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்து நீர் உறிஞ்சுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், குட்டையில் ஆர்சி கான் கிரேட்டில் அமைக்கப்பட்டிருந்த சோலார் சூரிய ஒளி தகடுகள் மற்றும் மின்மோட்டார் பம்பு செட்டுகளை உடைத்து திரும்ப எடுத்துச் சென்று விட்டனர். இந்த குட்டையை சுற்றி காட்டுப்பா ளையம் அருகில் உள்ள பட்டம்பாளை யம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட விவ சாய பாசன நிலங்கள் உள்ளன. மேலும் 25க்கும் மேற்பட்ட கிணறுகளும், 100க் கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுக ளும் உள்ளன. இந்த குட்டையை நில அளவு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றும். அவிநாசி அத்திக்க டவூர் திட்டத்தில் நீர் நிரப்ப உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் தலைமை யில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீக்கும் கூட்டத்தில் உரிய ஆதாரங்க ளுடன் மூன்று முறைக்கு மேல் பேசப் பட்டு மனு கொடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் கோட்டாட்சியாளர், அவிநாசி வட்டாட்சியர் உத்தரவின் பெயரில் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி தலைவர் முன்னிலையில் இக்குட்டையை அளவு செய்து அத்துக் கள் நடவு செய்யப்பட்டது. இதுகுறித்து பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறை, அவிநாசி அத்திக் கடவு திட்ட செயற்பொறியாளர், அவி நாசி பெருந்துறை ஆகியோருக்கு பதிவு தபால் மூலம் மனு அனுப்பப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. எனவே அவிநாசி அத் திக்கடவு திட்ட நீர் நிரப்ப அரசு தேர்வு செய்யப்பட்ட அடிப்படையில் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.
கஞ்சா வியாபாரியின் சொத்துக்கள் முடக்கம்
நாமக்கல், நவ.8- நாமக்கல் நகரில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்து, அவர்களின் சொத்துகளை முடக்கம் செய்த காவல் ஆய்வாள ருக்கு காவல் துறை இயக்குநர் பாராட்டு சான்றிதழ் வழங்கி னார். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்திற்கு திங்களன்று வந்த காவல்துறை இயக்குநர் சைலேந் திரபாபுவை, மாவட்ட கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி வரவேற்றார். பின்னர் மாவட்ட காவல் அலுவ லகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு காவல் துறை இயக்குநர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும், நாமக்கலில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்து அவர்களின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுத்த நாமக்கல் காவல் ஆய்வாளர் சங்கரபாண்டியனுக்கு நற் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். கூட்டத்தில், கூடுதல் மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள், துணை மாவட்ட கண்காணிப் பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
விபத்தில் 4 பேர் படுகாயம்
உதகை, நவ.8- கூடலூரைச் சேர்ந்த ராஜன் என்பவர் ஆட்டோ வில் பயணிகளோடு தொரப் பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது உதகையிலிருந்து மைசூரு நோக்கி சென்ற கொண்டி ருந்த சுற்றுலா பயணிகளின் கார், மாக்கமூலா பகுதியில் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுநர் ராஜன் (59), தொரப்பள்ளி யைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஆண்ட்ரியா (20), குனியல் சந்தோஷ் (28), சுதிஷ் குமார் (29) ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். இவ்விபத்து குறித்து கூட லூர் காவல் துறையினர் பெங் களூருவை சேர்ந்த கார் ஓட்டு நர் லக்கா ரெட்டியிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
முதுகு வலிக்காக சென்ற வாலிபர் உயிரிழப்பு தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சை என குற்றச்சாட்டு
அன்னூர், நவ.8- அன்னூரில் முதுகு வலி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற வாலிபர் உயிரி ழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் உயிரிழப்பு ஏற்பட்டதாக குற் றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கீத் (22). இவருக்கு முதுகு வலி ஏற்பட்ட தால் சிகிச்சைக்காக அன்னூரில் உள்ள (பிர ணவ்) தனியார் மருத்துவமனைக்கு சென்றுள் ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு ஊசி செலுத்தப்பட்டதாக கூறப்படு கிறது. சிறிதுநேரம் கழித்து சங்கீத்திற்கு திடீ ரென வலிப்பு ஏற்பட்டு, மாரடைப்பும் ஏற்பட் டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் உட னடியாக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது உறவினர்களிடம் தெரிவித் துள்ளனர். இதன்பின் சங்கீத் அன்னூரில் உள்ள வேறு ஒரு தனியார் மருத்துவம னைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற் றும் உறவினர்கள் (பிரணவ்) தனியார் மருத்து வமனை தவறான சிகிச்சை அளித்ததால் வலிப்பு, மாரடைப்பு ஏற்பட்டு சங்கீத் உயிரி ழந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். இதுவரை அவருக்கு இதுமாதிரி எந்த பிரச்சனையும் இல்லை என கூறும் அவரது பெற்றோர் மற் றும் உறவினர்கள், சங்கீத் உயிரிழப்புக்கு கார ணமான தனியார் மருத்துவமனை மீது உரிய டவடிக்கை எடுக்க வலியுறுத்தி அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், உயிரிழந்த சங்கீத் உடல் அன் னூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரி சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.