கோவை, செப்.4- ரூ.799 கோடியில் செயல்படுத்தப் பட்டு வரும் பில்லூர் 3 ஆவது குடி நீர் திட்டத்தின் பணிகள் குறித்து அதி காரிகளுடன் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சி ணாமூர்த்தி ஆலோசனை மேற் கொண்டார். கோவை நகருக்கு கூடுதல் குடிநீர் விநியோகம் செய்ய பில்லூர் 3 ஆவது குடிநீர் திட்டப்பணிகள் ரூ.799 கோடி யில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் தற்போதைய நிலை மற் றும் பாதாள சாக்கடை திட்டப்பணி கள் குறித்து அதிகாரிகளுடன், தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சி ணாமூர்த்தி ஆலோசனை மேற் கொண்டார். இக்கூட்டம் கோவை, பாரதி பார்க் சாலையில் உள்ள குடி நீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணை யர் மு.பிரதாப் முன்னிலை வகித்தார். இதன்பின் நெல்லித்துறையில் முரு கையன் பரிசல்துறை பகுதியில் ரூ.134 கோடியில் நீரேற்று நிலையம் நடைபெற்று வருகிறது. அங்கு செப்.25 ஆம் தேதியன்று சோதனை ஓட்டம் மேற்கொள்ள வி.தட்சிணா மூர்த்தி உத்தரவிட்டார். மேலும், அக்.20 ஆம் தேதி மருதூர் சுத்திக ரிப்பு நிலையத்தில் குடிநீர் பம்பிங் செய்து, பன்னிமடை பகுதியில் ரூ.104 கோடியில் 73 லட்சம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட 2 குடிநீர் சேகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரும் வகையிலும் போர்க்கால அடிப்படை யில் கட்டுமான பணிகளை விரைவாக வும், தரமாகவும் முடிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சணாமூர்த்தி அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து அவர், ரூ.591 கோடியில் நடைபெற்று வரும் குறிச்சி, குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்டப்பணியில் 390 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணி குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அப் போது அவர், இந்த மாத இறுதிக்குள் 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். முன் னதாக, இக்கூட்டத்தில் குடிநீர் வடி கால் வாரிய கோவை தலைமை பொறியாளர் செல்லமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.