districts

img

சிறுதானிய உணவு குறித்து கலந்தாய்வு கூட்டம்

தருமபுரி, ஜூன் 1- தருமபுரியில் நடைபெற்ற சிறுதானிய உணவு குறித்து  கலந்தாய்வு கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண் டனர். தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு சார்பில் சிறு தானிய உணவு குறித்து கலந்தாய்வு கூட்டம்  தருமபுரி சந்திரா  ஹாலில் நடைபெற்றது. அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரங்கநாயகி வரவேற்றார். தருமபுரி சட்மன்ற உறுப்பினர் வெங்கடேசன் சிறப்புரை யாற்றினார். தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்ட மைப்பு தலைவர் ஆனந்தன், ரியல் பவுண்டேசன் இயக்குநர்  செந்தில்ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகன், சென்னப்பன், மாரியப்பன் மற்றும் பெண்கள் இணைப்புக் குழு உமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில், அனைத்து ரேசன் கடைகளிலும் சிறு  தானியங்களை வழங்க வேண்டும். பாரம்பரிய விதை களை மீட்டெடுக்கும் பொருட்டு சிறுதானிய விதை திருவிழாக் களிலும், கிராமங்கள், பள்ளி, கல்லூரிகளிலும் விழிப்புணர்வு  பிரச்சாரம் செய்ய வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு களையும், ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளை பாதுகாக்க செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மாறாக சரிவிகித உணவான சிறுதானியத்திற்கு முக்கியத் துவம் கொடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, விடுதிகள், சிறைச்சாலைகள், அரசு உணவகங்களில் காலை உணவில்  சிறு தானியங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.