districts

img

கட்டுமான உழைக்கும் பெண்கள் மாநாடு

நாமக்கல், மார்ச் 22- நாமக்கல் மாவட்ட கட்டுமான உழைக்கும் பெண்கள் மாநாடு செவ் வாயன்று நடைபெற்றது. கட்டுமான உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் நாமக்கல் மாவட்ட மாநாடு சிஐடியு அலுவலகத் தில் ஜீ.பழனியம்மாள் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டை துவக்கி வைத்து, மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ.லூர்துரூபி உரையாற்றினார். கட் டுமான தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் டி.குமார் சிறப்பு ரையாற்றினார். சிஐடியு நாமக்கல் மாவட்ட செயலாளர் ந.வேலுச்சாமி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கு.சிவராஜ் ஆகி யோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர்.புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து மாவட்ட ஒருங் கிணைப்பு குழுவின் கன்வீனராக ஜீ.பழனியம்மாள், உதவி கன்வீனர் களாக ஆர்.சரோஜா, எஸ்.ஜெயமணி, பி.பெருமாயி, கமிட்டி உறுப்பினர் களாக பி.ஆனந்தி, புஷ்பராணி, ஏ.கந் தாயி, பி.ராணி, எஸ்.சுதா  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதைய டுத்து புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து கட்டுமான தொழிலாளர் சம் மேளன மாநில உதவிச்செயலாளர் சி.ஆர்.ராஜா முகமது நிறைவுரையாற் றினார். இதைத்தொடர்ந்து மார்ச் 28, 29  அகில இந்திய பொது வேலை நிறுத்தத் தில் பெண் தொழிலாளர்கள் அனை வரும் பங்கேற்பது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.