districts

img

சேலம் மாவட்ட கட்டுமான உழைக்கும் பெண்கள் பேரவை

சேலம், மே 30- சேலம் மாவட்ட கட்டு மான உழைக்கும் பெண்கள் பேரவை கூட்டம்  விபி சிந் தன் நினைவகத்தில், சீரங் கன் நினைவரங்கில் நடை பெற்றது. சித்தம்மாள்  தலை மையில் நடைபெற்ற இந்த  பேரவை கூட்டத்தில், கட்டு மான சங்க மாவட்டக்குழு எஸ்.எம்.தேவி வரவேற்று பேசினார். சங்கத் தின் மாவட்ட செயலர் செ.கருப்பண் ணன் பேரவையை துவக்கி வைத்தார். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட அமைப்பாளர் வைர மணி, கட்டுமான சங்கத்தின் மாவட்ட தலை வர் சி.மயில்வேலன், கட்டுமான உழைக்கும் பெண்கள் மாநில கன்வீனர் ராஜேஸ்வரி ஆகியோர் சிறப்புரை வழங்கினர். இக்கூட்டத்தில், ஜூலை மாதம் சேலம் நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களை பங்கேற்கப் செய் வது என தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து, 12  பேர் கொண்ட உழைக்கும் பெண்கள் கமிட்டி  தேர்வு செய்யப்பட்டது. இந்த பேரவையில்  100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.