அவிநாசி, ஆக.27- சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்க அவிநாசி ஒன்றிய மாநாட்டில் தீபாவளி போனஸாக ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் அவிநாசி ஒன்றிய மாநாடு தனி யார் திருமண மண்டபத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. ஒன்றியத் தலைவர் ஏ.ராஐன் தலை மையேற்றார். அஞ்சலி தீர்மானத்தை கே. ராஜா முன்மொழிந்தார். இதையடுத்து வேலை அறிக்கையை பி.கனகராஜ் சமர்ப் பித்தார். இதில் சிமெண்ட், கம்பி, மணல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கட்டு மான தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 55 ஆக குறைக்க வேண்டும். தொழி லாளர்களுக்கு பணி செய்யும் இடத்தில் விபத்து ஏற்பட்டால் மருத்துவச் செலவை நல வாரியம் மூலம் வழங்க வேண்டும். இயற்கை மரணத்திற்காக வழங்கப்படும் ரூ. 55 ஆயிரத்தை உயர்த்தி ரூ.1 லட்சமாக வழங்க வேண்டும். வேலைக்கு சென்று வரும்போது விபத்தில் மரணமடைந்தால் உதவித் தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்துள்ள மேஸ்திரி மற்றும் இன்ஜினியர்களுக்கு கட்டு மான இயந்திரங்கள் வாங்குவதற்கு வங்கி கடன் வழங்க வேண்டும். கட்டுமான தொழி லாளிக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கள் ஒதுக்கீடு செய்யக் வேண்டும். தீபாவளி போனஸாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அவிநாசி ஒன்றிய தலைவராக ராஜன், செயலாளராக பி.கனகராஜ், பொருளாள ராக ஹரிகரன் உட்பட 12 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. இம்மாநாட்டில் கட்டிட கட்டுமான தொழி லாளர் சங்கத்தின் மாநில பொதுச்செய லாளர் குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் முத்துச் சாமி, அவிநாசி பொதுத் தொழிலாளர் சங்கச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் குப்புசாமி, ஒன்றிய நிர்வாகி வேலுசாமி, ராஜா ஆகியோர் பேசினர்.