districts

img

போனஸ் கோரி கட்டுமான‌ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஆக.20- தீபாவளி பண்டிகையை முன் னிட்டு ரூ.5 ஆயிரம் போனஸ் வழங் கக்கோரி (சிஐடியு) கட்டிட தொழி லாளர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான தொழிலாளர்களின் மாத ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிர மாக உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமான பெண் தொழிலாளர்க ளுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க  வேண்டும். வீடு இல்லாத தொழி லாளர்களுக்கு இலவச வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட  தலைவர் சி.கலாவதி  தலைமை வகித்தார். இதில், கட்டுமான சங்க மாவட்ட பொருளாளர் ரோஜாமணி, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஜி. நாகராஜன், மாவட்ட பொருளாளர் ஏ.தெய்வானை, மாவட்ட துணைத்  தலைவர் பி.ஆறுமுகம், மாவட்ட  இணை செயலாளர் சி.சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் வி.எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலை வர் எம்.அசோகன் துவக்க உரை யாற்றினார்.  சிஐடியு மாவட்ட செய லாளர் ந.வேலுசாமி, மாவட்ட உதவி செயலாளர் சு.சுரேஷ், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க தலைவர் எஸ்.தமிழ் மணி உட்பட பலர் வாழ்த்தி உரை யாற்றினர். இதில், கட்டுமான தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் கு. சிவராஜ், மாவட்ட பொருளாளர் கே. கண்ணன், துணைத் தலைவர்கள் பி.சரபோஜன், பி.மாதேஸ்வரன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.துரை சாமி உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.