திருப்பூர், ஜூலை 17 - தமிழ்நாடு கட்டுமான நல வாரிய கூட் டங்களில் முத்தரப்பு கமிட்டி ஒப்புக் கொண்ட, கட்டுமான தொழிலாளர்க ளின் கோரிக்கைகளை உடனடியாக அர சாணை வெளியிட்டு, நடைமுறைப்ப டுத்த வலியுறுத்தி கட்டுமான தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மேட்டுப்பாளையத்தில் நல வாரிய அலுவலகம் முன்பாக, திங்க ளன்று நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட் டத்திற்கு தமிழ்நாடு கட்டிட கட்டுமான தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் டி.குமார் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார். சிஐடியு மாவட்ட பொருளாளர் ஜி. சம் பத், கட்டுமான சங்க மாவட்ட செயலா ளர் ஏ.ராஜன், மாநிலகுழு உறுப்பினர் எம்.கணேசன், மாவட்ட பொருளா ளர் பி.ரமேஷ் ஆகி யோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர். மாத ஓய் வூதியம் ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், பெண்களுக்கு 55 வயது நிறை வடைந்த உடனும், ஆண்களுக்கு 60 வயது ஆனவுட னும் காலதாமதம் இல்லாமல் மாதந்தோறும் பத்தாம் தேதிக்குள் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து நலவாரிய பண பலன்களையும் தாமதம் இல்லா மல் வழங்க வேண்டும் புதுப்பிப்பு சான்று பெற தொழிற்சங்க நிர்வாகிகளி டம் கையெழுத்து சான்று பெறுவதை அனுமதிக்க வேண்டும், விபத்து மரண இழப்பீடு ரூ.5 லட்சம் வழங்குவதை எந்த இடத்தில் விபத்து நடந்தாலும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கட்டுமான தொழிலாளர்கள் திரளா னோர் பங்கேற்றனர்.