திருப்பூர், ஜூலை 30 - கட்டுமான தொழிலா ளர்களுக்கு எங்கு விபத்து நடைபெற்றாலும் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சிஐடியு கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் கோரியுள்ளது. சிஐடியு கட்டுமான தொழி லாளர் சங்கத்தின் திருப்பூர் தாலுகா மாநாடு ஞாயிறன்று சங்க மாவட்ட அலுவல கத்தில் நடைபெற்றது. இதற்கு சங்கத் தலை வர் சுப்பிரமணி தலைமை வகித்தார். சங்கத்தின் கொடியை சௌந்தரராஜன் ஏற்றி வைத்தார். பத்மநாபன் அஞ்சலி தீர்மானம் முன் மொழிய, சி.ராஜன் வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு மாவட்டத் தலை வர் சி.மூர்த்தி உரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராஜன் பேசினார். நிறை வாக, கட்டுமான சங்க மாநில பொதுச்செய லாளர் டி. குமார் பேசினார். நலவாரியத்தில் உள்ள தொழிலாளர் களுக்கு பென்சன் தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். நலவாரித்தில் உள்ள பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் பென்சன் வழங்க வேண்டும். நல வாரியத் தில் உள்ள தொழிலாளர்கள் எங்கு விபத்து நடந்தாலும் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதன்பின், தாலுகா தலைவராக சுப்பிர மணி, செயலாளராக சி.ராஜன், பொருளா ளராக சக்தி, துணைத்தலைவர்களாக சௌந்தரராஜன், பத்மநாபன், சிவதாசன், துணைச்செயலாளர்களாக சந்திரன், மனோ கரன் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.