நாமக்கல், ஜூன் 7- நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை நக ராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகி யோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நாமக்கல் நகருக்கு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற் காக நாமக்கல் நகராட்சி, முத லைப்பட்டி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அமைப் பதற்காக தேர்வு செய்யப்பட் டுள்ள இடத்தினை நகராட்சி நிர் வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் செய்தனர். பேருந்து நிலையத்தில் பேருந் துகள் நிறுத்தும் வசதி, வணிக வளாகம் உள்ளிட்டவை கொண்ட வரைபடம், அணுகு சாலை வரை படம் உள்ளிட்ட பல்வேறு விவரங் களை பார்வையிட்டு ஆய்வு செய் தனர். இதனைத் தொடர்ந்து, நாமக் கல் நகராட்சி மன்ற கூட்ட அரங் கில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான பணி குறித்தும்,
நாமக்கல் மாவட்டத் தில் உள்ள நகராட்சிகளில் மேற் கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்தும், நக ராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய் வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நகராட்சி நிர் வாகத்துறை அமைச்சர் பேசுகை யில், நாமக்கல் நகரத்திற்கு ரூ.37 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை நேரடியாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம். பல ஆண் டுகளாக கிடப்பில் போடப்பட்டி ருந்த திட்டத்தினை விரைந்து முடிக்க வேண்டுமென வலியுறுத் தப்பட்டுள்ளது. பேருந்து நிலை யம் அமைப்பதில் அணுகு சாலை மற்றும் சுற்றுவட்ட சாலை முக்கிய பணியாகவுள்ளது. எனவே, சுற்று வட்ட சாலை அமைப்பதற்கு தேவை யான இடத்தினை கையகப்படுத் துவதில் வருவாய் துறை அலுவ லர்கள் விரைந்து செயல்பட வேண் டும். புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கான அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கிவிடப் பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சி யர் ஸ்ரேயா பி சிங், மாநிலங் களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார், நாமக்கல் சட்ட மன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பி னர் கு.பொன்னுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.