districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

இறந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் சிசு!

நாமக்கல், மார்ச் 31- எருமப்பட்டி அருகே குப்பைமேட்டிலிருந்து, இறந்த நிலை யில் கிடந்த பெண் சிசுவை அதிகாரிகள் மீட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள பொட்டி ரெட்டிபட்டி கருப்பணசாமி கோவில் அருகே உள்ள குப்பை மேட்டில் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் சிசு இறந்த  நிலையில் கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் எருமப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த னர். அதன்பேரில் எருமப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் வெற்றிவேல் மற்றும் பொட்டிரெட்டிபட்டி கிராம நிர்வாக அலுவலர் முரளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து குப்பை மேட்டில் இறந்து கிடந்த பெண் சிசுவை மீட்டு, நாமக்கல் அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும், குப்பைமேட்டில் இறந்த பெண் சிசுவை வீசி  சென்றது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து சுகாதாரத்துறை யினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எருமப்பட்டி மற்றும்  பொட்டிரெட்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார சுகாதார நிலை யங்களில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணிகளின் விவரங் களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

வெள்ளைக்கழிச்சலால் மயில்கள் பாதிப்பு

வெள்ளைக்கழிச்சலால் மயில்கள் பாதிப்பு சேலம், மார்ச் 31- எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளைக்கழிச்சல் நோயால் பாதிக்கப்பட்டு மயில்கள் உயிரிழப்பது அதிகரித்து  வருகிறது. சேலம் மாவட்டம், எடப்பாடி மற்றம் அதன் சுற்றுவட் டார கிராமங்களில் உள்ள வயல்வெளிகளில் ஆயிரத்திற் கும் மேற்பட்ட மயில்கள் வசித்து வருகின்றன. தற்போது  அறுவடை காலம் முடிந்த நிலையில், வயல்களில் சுற்றித்  திரியும் மயில்கள், தண்ணீர் மற்றும் உணவுத் தட்டுப்பாட் டாலும், அப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ள தாலும், சமீபகாலமாக இப்பகுதியில் மயில்கள் வெள்ளைக் கழிச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நோய் பாதிப்பிற் குள்ளான மயில்கள் நடக்க இயலாமல் வயல்வெளியில் சுருண்டு விழுந்து உயிரிழக்கும் நிகழ்வு அதிகரித்து வருகி றது. இதுகுறித்து வனத்துறை, கால்நடைத்துறை அலுவலர் கள் ஆய்வு செய்து மயில்களை பாதுகாக்க வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியிருப்புக்குள் புகுந்த மான் மீட்பு

குடியிருப்புக்குள் புகுந்த மான் மீட்பு சேலம், மார்ச் 31- கெங்கவல்லி அருகே கடம்பூர் வனப்பகுதியில் இருந்து  உணவு தேடி ஊருக்குள் புகுந்த மான் குட்டி, வனப்பகு தியில் பாதுகாப்பாக விடப்பட்டது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி வனச்சரகம், கடம்பூர் வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், வனப்பகுதியில் உள்ள நீரா தாரங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளதால், மான்கள் தண் ணீர் தேடி ஊருக்குள் புகுந்த வண்ணம் உள்ளன. இந்நிலை யில், கூட்டத்தை விட்டு பிரிந்த 6 மாதமே ஆன ஆண் மான்  குட்டி ஒன்று, கடம்பூர் கிராமத்திற்குள் புகுந்தது. அப்போது,  தெருநாய்கள் ஒன்று சேர்ந்து விரட்டியதால், ஓட்டம் பிடித்த  மான் அப்பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்தது. அதனைக் கண்டு வீட்டில் இருந்தவர்கள், கெங்கவல்லி வனச்சரகர் சிவக் குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், கெங்க வல்லி வனவர் மற்றும் வனக்காப்பாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மானை பாதுகாப்பாக மீட்டனர். இதன் பின் அருகிலுள்ள காப்புக்காட்டிற்கு கொண்டு சென்று விடு வித்தனர்.

கொல்லிமலையில் தீயணைப்பு நிலையம் கட்டும் பணி தீவிரம்

நாமக்கல், மார்ச் 31- கொல்லிமலையில் ரூ.1.79 கோடி யில் தீயணைப்பு நிலையம் கட்டுமானப் பணி தீவிரமாக நடைபெற்று வருகி றது. நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை வாழவந்திநாடு ஊராட்சி, செம் மேடு பகுதியில் தீயணைப்பு நிலை யம் செயல்பட்டு வருகிறது. இங்கு  நிலைய அலுவலர், 11 தீயணைப்பு  வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். நிலையத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வாக னம், தண்ணீர் நிரப்பிய தீயணைப்பு வாகனம் உள்ளது. கொல்லிமலை பகு தியில் தீ தடுப்பு பணிகளிலும் அருவிக ளிலும் நீர்வீழ்ச்சிகளிலும் தவறி விழு பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மழைக்காலங்களில் மீட் புப் பணிகளிலும் வெயில் காலங்க ளில் தீ தடுப்பு பணிகளிலும் ஈடுபட்டு  வருகின்றனர். சொந்த கட்டிடம் இல்லா ததால், வாடகை கட்டிடத்தில் தீய ணைப்பு நிலையம் செயல்பட்டு வந்தது.  அலுவலகம் மட்டுமே கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. வாகனங்கள் வெளியில் நிறுத்தப்பட்டு வருகிறது. மழை, வெயில் காலங்களில் வாகனங் கள் அடிக்கடி பழுதாவதால், தீய ணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டி டம் வேண்டுமென நீண்ட நாட்களாக அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த னர். இந்நிலையில், தமிழ்நாடு காவலர்  வீட்டு வசதி கழகம் மூலம், புதிய தீய ணைப்பு நிலையம் கட்ட செம்மேடு  அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.1.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிய தீயணைப்பு நிலை யத்தில் அலுவலகம், 2 வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்த இடம் உள்ளிட்ட  பல்வேறு வசதிகளுடன் கூடிய கட்டி டம் கட்டும் பணி நடைபெற்று வருகி றது. இங்கு பணியாற்றும் நிலைய அலு வலர் உள்ளிட்ட பணியாளர்கள், குடும் பத்தினருடன் குடியிருக்க கட்டிடம் கட்ட  திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட் டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

விவசாயிடம் ரூ .1 லட்சம் பணம் பறிமுதல்

விவசாயிடம் ரூ .1 லட்சம் பணம் பறிமுதல் ஈரோடு, மார்ச் 31- அந்தியூர் அருகே விவசாயிடம் ரூ.1 லட்சம் பணத்தை தேர்தல்  பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.  ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பட்டூர் நால் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி நிர்மல் ராஜ்கு மார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பைரட்டிபள்ளி பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(44) என்ற  விவசாயி சரக்கு வாகனத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து  புண்ணாக்கு வாங்குவதற்காக ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்து  500 பணம் எடுத்து வந்துள்ளார். அவரிடம் உரிய ஆவணங் கள் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதி காரிகள் பறிமுதல் செய்து பவானி உதவி தேர்தல் நடத்தும்  அலுவலரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதற்குரிய ஆவணங் களை காண்பித்து பணத்தைப் பெற்றுச் செல்லுமாறு அறிவு றுத்தினர். பணத்தை பறிகொடுத்த விவசாயி அதனை எப்படி  பெருவது எனத்தெரியாமல் தடுமாறியது அங்கிருந்தவர் களை கண்கலங்கச்செய்தது.

மதவாதத்தால் நாட்டை துண்டாடும் பாஜகவை வீழ்த்துவோம்

ஆ.ராசா வாக்கு சேகரிப்பு

மேட்டுப்பாளையம், மார்ச் 31- பொய்களை பேசி மதவாதத்தால் நாட்டை துண்டாடும் பாஜகவை வீழ்த்த, ஒரே  சக்தியாக ஒன்றிணைவோம் என மேட்டுப்பா ளையத்தில் நடைபெற்ற பரப்புரையில் ஆ. ராசா பேசினார். வருகிற மக்களவை தேர்தலில், நீலகிரி  நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா, ஞாயிறன்று காலை முதல் மேட்டுப்பாளையம் பகுதியில் தனது பிரச்சாரத்தை துவக்கினார். குறிப் பாக, மேட்டுப்பாளையம் நகர எல்லையில் காரமடை, வேளாங்கண்ணி பேருந்து நிலைய  பகுதியில் முதலில் தனது வாகன பிரச்சா ரத்தை துவக்கிய ஆ.ராசா, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரி  பிரச்சாரம்  மேற்கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த வாக்கா ளர் மத்தியில் பேசிய ஆ.ராசா, “இந்தியா ஒரு  மதச்சார்பற்ற நாடு. இந்த நாட்டில் மதத்தின் பெயரால் அரசியல் நடத்தி, வெறும் பொய்யை மட்டுமே பரப்பி மதவாதத்தை தெளித்து நாட்டை துண்டாடுகின்றனர். நாடா ளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் பொய்யை மட்டுமே சொல்லி  கொண்டிருக்கின்ற மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கு ஒரே சக்தி யாக இந்தியா கூட்டணி மட்டுமே உள்ளது. ஏனென்றால் நாளையே எடப்பாடி பழனிச் சாமி பாஜக பக்கம் போய்விடுவார். எனவே ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி மலர  உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்றார்.    இப்பிரச்சாரக் கூட்டத்தில் திமுக, காங்கி ரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விசிக உள்ளிட்ட  கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு ஈரோடு, மார்ச் 31- ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக  வேட்பாளர் கே.இ.பிரகாஷ் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகு தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பா ளர் எலவமலை, விருமாண்டம்பாளையம், செங்கலபாறை,  பெரியார் நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், சித்தோடு, கரட் டுப்பாளையம், பேரோடு, சக்தி நகர், ஆலுச்சாம்பாளையம், தயிர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளை யம், வேட்டுவபாளையம், கூரபாளையம், ராயபாளையம், நஞ்சனாபுரம், பவளத்தாம்பாளையம், மேட்டுக்கடை, கதிரம் பட்டி, மூலக்கரை, கூரபாளையம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப. மாரிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர் பா. லலிதா, தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் ரமேஷ், முருகன், அன்பு ஜனாதிபதி, மாதர் சங்க நிர்வாகி கலாமணி, தங்கவேல் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் வாக்கு சேகரிப்பில் கலந்து கொண்டனர்.

வனப்பகுதியில் வறட்சி எதிரொலி சாலையில் உலவும் வனவிலங்குகள்

ஈரோடு, மார்ச் 31- வனப்பகுதியில் வறட்சியின் எதிரொலியாக, உணவு, குடிநீர் தேடி ஊருக்குள் வனவிலங்குகள் வருவது அதிகரித்து  உள்ளது.  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத் தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, மான்,  புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளது. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவு வதால், உணவு, தண்ணீரை தேடி யானைகள் வனப்பகு தியை விட்டு வெளியேறி கிராமத்திற்குள் வருவது அதிகரித் துள்ளது. இந்நிலையில், பவானிசாகர் அணை பகுதியில்  தண்ணீரை தேடி வந்த 3 காட்டுயானைகள் பவானிசாக ரில் இருந்து பண்ணாரி வரும் சாலையில் உள்ள சின்ன  பண்ணாரி மாரியம்மன் கோவிலில் உள்ளே புகுந்தது.  பின்னர், அங்கிருந்த சின்டெக்ஸ் டேங்க் மற்றும் போர்வெல்,  தென்னை மரங்களை இழுத்து சேதப்படுத்தியது.  இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளதால் இரவு நேரங்களில் தண்ணீர் மற்றும் உணவுக்காக தேடி வரும்  காட்டுயானைகளை வனத்துறையினர் தீவிரமாக கண்கா ணித்து வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

தடுப்பணையை ஆய்வு செய்ய கோரிக்கை

உதகை,மார்ச் 31- தடுப்பணை உடைந்து தண்ணீர் வெயியேறுவதால் தடுப்பணையை உடனடியாக ஆய்வு செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் சதுப்பு நிலங்கள் மற்றும் தேயிலை தோட்டங்கள், நீரோடை  செல்லும் பகுதிகளில், தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்த வும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பல்வேறு துறை கள் சார்பில், தேவாலா பகுதியில் தடுப்பணைகள் கட்டப்பட்டு  உள்ளது. இத்தடுப்பணைகள் போதிய தரம் இன்றி கட்டப்பட்ட தால், கட்டிய சில ஆண்டுகளில் உடைந்து கற்கள் பெயர்ந்து  விரிசல் காணப்படுகிறது. இதனால், தண்ணீர் தேங்கி நிற்கா மல் வீணாகி வெளியேறி வருகிறது. தற்போது கோடை வெயிலால் தண்ணீர் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின் றனர். இந்நிலையில், தரமற்ற முறையில் கட்டப்பட்ட தடுப் பணைகளில் தண்ணீர் தேங்கி நிற்காமல், வெளியேறி வரு வதால் மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் சூழல்  உருவாகி வருகிறது. எனவே, இப்பகுதியில் ஆய்வு செய்து  தண்ணீர் வீணாகி வருவதை தடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் புலி நடமாட்டம்

உதகை,மார்ச் 31- தலைகுந்தா பகுதியில் இருந்து அத்திக்கல் பகுதிக்கு செல்லும் சாலை ஓரத்தில் ஒரு புலி படுத்துக் கொண்டி ருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை, புலி, சிறுத்தை, காட்டு மாடு மற்றும் கரடி  உள்ளிட்ட வன விலங்குகள் ஏரளம் உள்ளது.  இவைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு படையெடுத்து வரு வது வாடிக்கையாக உள்ளது. கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் காட்டு யானைகளால் அடிக்கடி பொது மக்கள் தாக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வரு கிறது. மேலும் சில இடங்களில் காட்டு மாடு கள் தாக்குவதும், புலி மற்றும் சிறுத்தை தாக்கு வதும் வாடிக்கையாக உள்ளது. மேலும் இவைகள் தற்போது மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வெகு இயல்பாக வருவ தால் பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாகின் றனர். இந்நிலையில் உதகை அருகே உள்ள  தலைகுந்தா பகுதியில் இருந்து அத்திக்கல் பகுதி செல்லும் சாலை ஓரத்தில் ஒரு புலி  படுத்து கொண்டுள்ளது. இதனை சுற்றுலாப் பயணிகள் சிலர் வீடியோ எடுத்து வெளி யிட்டுள்ளனர். இப்பகுதியானது பொதுமக் கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகவும், வாக னங்கள் அதிகம் செல்லும் இந்த சாலை  ஓரத்தில் புலி ஒன்று படுத்து கொண்டிருப் பது போல் வெளியாகியுள்ள வீடியோ வால் தற்போது பொதுமக்கள் அச்சத்திற்குள் ளாகி உள்ளனர்.

நூறு சதவிகித வாக்கு பதிவு ராட்சத பலூன் ஏற்றி விழிப்புணர்வு

பொள்ளாச்சி, மார்ச்.31- பொள்ளாச்சியில் பொது மக்களிடையே வாக்களிப்பதின் அவசியம் குறித்து வானில்  ராட்சத பலூன் ஏற்றி விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்க ளவைத் தேர்தல் நடைபெறுகிறது, இதை யொட்டி வாக்காளர்கள் 100% வாக்களிக்க வலியுறுத்தி பொதுமக்களிடையே தேர்தல் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச் சிகளை நடத்தி வருகின்றனர்,இதன் ஒரு  பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி யில் பொள்ளாச்சி பேருந்து நிலையம், நக ராட்சி அலுவலகம், மாவட்ட மருத்துவமனை  ஆகிய பகுதிகளில் என் வாக்கு என் உரிமை,  100% வாக்களிக்க வேண்டும் என்ற வாச கங்களுடன் கூடிய ராட்சத பலூனை வானில்  பறக்க விடப்பட்டது. பொள்ளாச்சி சார் ஆட்சி யரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரு மான கேத்தரின் சரண்யா இந்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கடந்த முறை நடந்த முடிந்த தேர்தல்களில் குறைவான வாக்கு பதிவான இடங்களில் வாக்கு சதவீதத்தை உயர்த்த மக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தி வருவதாக உதவி தேர்தல்  நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யா தெரிவித்தார்.

ஈரோடு: விவசாயிடம் ரூ. 1 லட்சம் பணம் பறிமுதல்

ஈரோடு, மார்ச் 31- அந்தியூர் அருகே விவசாயிடம் ரூ.1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.  ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பட்டூர் நால்ரோட்டில்  தேர்தல் பறக்கும் படை அதிகாரி நிர்மல்  ராஜ்குமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர  மாநிலம் சித்தூர் மாவட்டம் பைரட்டி பள்ளி பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(44) என்ற விவசாயி சரக்கு வாகனத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து புண் ணாக்கு வாங்குவதற்காக ரூ. 1 லட்சத்து  5 ஆயிரத்து 500 பணம் எடுத்து வந்துள் ளார். அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல்  பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்  செய்து பவானி உதவி தேர்தல் நடத் தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதற்குரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைப் பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தினர். பணத்தை பறிகொடுத்த விவசாயி அதனை எப்படி பெருவது எனத்தெரியாமல் தடுமாறியது அங்கிருந்தவர்களை கண்கலங்கச்செய்தது.

ஆ.ராசாவுக்கு வாக்கு சேகரிப்பு

திருப்பூர், மார்ச். 31- திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமுருகன் பூண்டி நகராட்சி பகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து, தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. திமுக நகர மன்ற தலைவர் குமார் தலைமையில் நடைபெற்ற இப்பி ரச்சாரத்தில், நகர் மன்ற உறுப்பினர் பாரதி, மார்க்சிஸ்ட்  கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் பொன்னுச் சாமி உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளியங்கிரி மலை ஏறிய மேலும் ஒருவர் பலி
இதுவரை ஆறு பக்தர்கள் பலியான அதிர்ச்சி!

கோவை, மார்ச் 31- கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் செல்கின்றனர். ஏழு மலை களை தாண்டி அங்குள்ள சிவலிங்கத்தை வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக் தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த  ஆண்டு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனி டையே கடந்த வாரம் மலை ஏறிய பக்தர்கள் 3 பேர் அடுத்த டுத்து உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ரகுராமன் என்பவர் சனியன்று வெள்ளியங்கிரி மலை ஏறினார். அப்போது ஐந்தாவது மலை அருகே அவருக்கு திடீரென  உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உடன் சென்ற வர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில், சுமைதூக்கும் தொழிலாளர்களுடன் அங்கு சென்ற  வனத்துறையினர் அவரை மீட்டு அங்கிருந்து பூண்டி அடிவா ரப் பகுதிக்கு கொண்டு வந்து பார்த்தனர். அப்போது அவரை  பரிசோதித்து பார்த்த போது இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலந்துறை காவல் துறையினர், உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந் தாண்டில் இதுவரை மலையேறிய ஆறு பக்தர்கள் உயிரி ழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு

2024 மக்களவைத் தேர்தல் நிலைப் பாடு குறித்த தமிழ்நாடு, புதுச்சேரி மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வருகின்ற மக்களவைத் தேர்தலில் வகுப்புவாதிகள் மீண்டும்  ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதைக்  கருத்தில் கொண்டு, அதற்கு எதிரான வலிமையான கூட்டணிக்கு வாக்களிக்க  தமிழ்நாடு ஜமாஅத்தே இஸ்லாமி முடிவு செய்துள்ளது. அந்த அடிப்படையில் தமி ழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தின் தலைமையில் அமைந்துள்ள இந் தியா கூட்டணிக்கு வாக்களிப்பது என தீர்மானிக்கப்பட்டது. இந்த தேர்தல் நிலைப்பாடு குறித்து  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநி லத் தலைவர் மெளலவி ஹனீஃபா மன் பயீ  கூறுகையில், எதிர்வருகின்ற நாடா ளுமன்றத் தேர்தல் கட்சிகளுக்கிடையே யான தேர்தல் அல்ல. ஜனநாயகத்திற் கும் வகுப்புவாதத்திற்குமான தேர்தல்.  வகுப்புவாத சக்திகளை வீழ்த்துவதன் மூலமே நம் நாட்டையும், ஜனநாயகத் தையும் காப்பாற்ற முடியும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என் பதை உணர்ந்துதான் ஜனநாயக சக்தி கள் பல்வேறு சமரசங்களுடனும், விட் டுக் கொடுப்புகளுடனும் கைகோர்த்து இந்தத் தேர்தலை எதிர்கொள்கின்றன. வகுப்புவாதக் கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும் என்றால் நமது வாக்குகள் ஒரு முகப்படுத்தப்பட வேண்டும். சமுதாய நலனை மட்டுமே முன்னிறுத்தாமல் தமி ழகத்தின், இந்தியாவின் எதிர்கால நல னைக் கருத்தில் கொண்டே தமிழ் மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், திமுக கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு செய் துள்ளது. வகுப்புவாதம் என்பது சிறுபான்மை, தலித்களுக்கு மட்டுமே எதிரானது அல்ல. ஒட்டுமொத்த மனித குலத்திற்கே எதி ரானதுதான். எனவே ஜனநாயகம் வலுப் பெற வேண்டுமென்றால் பாசிசம் வீழ்த் தப்பட வேண்டும். அதற்கான நல்வாய்ப் பாகவே இந்தத் தேர்தலை ஜமாஅத் நோக்குகிறது. ஆதரவளிப்பதுடன் மட்டு மின்றி தமிழ்நாட்டிலுள்ள ஜமாஅத்தே  இஸ்லாமியின் உறுப்பினர்களும், ஊழி யர்களும் களப்பணியாற்றுவார்கள். பாஜக ஆட்சியின் படுதோல்வியையும், அது நாட்டிற்கு ஏற்படுத்திய கேடுகளை யும், அதனால் ஏற்பட்ட விளைவுகளை யும் மக்கள் மன்றத்தில் எடுத்துரைப் போம். அத்துடன் நூறு விழுக்காடு வாக் குப்பதிவு நடைபெறவும், வாக்குச் செலுத்த மக்கள் பணம் வாங்குவது பாவச்செயல் என்ற விழிப்புணர்வை ஏற் படுத்தவும் முயற்சி மேற்கொள்ள உள் ளோம்’ என்றார்.

அஞ்சாதவர்கள் அஞ்சியது ஏன்?

கடந்த காலங்களில் பாஜகவுடன் கைகோர்த்து மக்கள் விரோத சட்டங்களை ஆதரித்த அதிமுக, மக்கள் மத்தியில் பகி ரங்க மன்னிப்பு கேட்கத் தயாரா? என சாமானிய மக்கள் மத்தியில் கேள்வி எழுந் துள்ளது. திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகு திக்குட்பட்ட பெருமாநல்லூர் பகுதியில் முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாய கரும், திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி ஜெயரா மன் அதிமுக தேர்தல் பணிமனையைத் திறந்து வைத்தார். இதையடுத்து செய்தி யாளர்களைச் சந்தித்த அவர், தொடர்ந்து  பாஜக சார்பில் மூன்றாவது முறையாக  நாங்கள்தான் வெல்வோம். எங்களது உறுப் பினர்கள் இருந்தால்தான் திட்டங்களைக் கேட்டு கொண்டு வர முடியும் என கூறுவது  மிரட்டல் முறை. மாநில உரிமைகளை முடக்க நினைக்கும் செயல். இதற்கு அதிமுக ஒரு  போதும் அஞ்சாது எனக் கூறினார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மோடியின் பாஜக ஆட்சிக்கு அடி பணிந்து அடிமைத்தனமாக அதிமுக நடந்து கொண்டது. ஜெயலலிதா இருந்தபோது உதய் மின் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றை ஏற்க முடியாது என்று மோடி அரசுக்கு வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால் எடப் பாடி முதல்வர் ஆனவுடன் ஜெயலலிதா எதிர்த்த எல்லாவிசயத்திலும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டனர். இதுதான் அஞ்சாமையா? இந்திய விவசாயிகளுக்கு அழிவை ஏற் படுத்தும் வேளாண் சட்டங்கள், குடியுரி மைத் திருத்தச் சட்டம் ஆகியவற்றை நாடா ளுமன்றத்தில் அதிமுக எதிர்த்திருந்தால் அந்த சட்டங்களே நிறைவேறி இருக்காது. ஆனால் அதிமுக ஆதரித்த காரணத்தால் தான் இன்று சிஏஏ, வேளாண் சட்டங்கள்  ஆகியவை தலைக்கு மேல் தொங்கும் கத் தியாக சிறுபான்மை மக்களையும், விவ சாயிகளையும் அச்சுறுத்தி வருகிறது. மக்கள் விரோத கொள்கைகளை எதிர்ப்ப தில் அஞ்சாமல் இருந்திருந்தால் பாஜக வுக்கு கடிவாளம் போட்டிருக்கலாம். அப் போது விட்டுவிட்டு, இப்போது நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று சொல்வது ஏமாற் றுத்தனமாகும். குறைந்தபட்சம் அந்த சட்டங் களை ஆதரித்தது அதிமுக செய்த தவறு  என்று பொதுவெளியில் மக்களிடம் பகிரங் கமாக மன்னிப்புக் கேட்க அதிமுக தயாரா?