கோவை, ஜூன் 9- கோவை மாநகராட்சி, சிவராம் நகரில் ரூ.2.5 கோடி மதிப் பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டும் பணி யினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத் தார். கோவை மாநகராட்சி, 65 ஆவது வார்டுக்குட்பட்ட சிவ ராம் நகரில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் வியாழனன்று துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, வார்டு எண்.32 மற்றும் 37க்குட்பட்ட தண்ணீர் பந்தல் சாலை - மகேஸ்வரி நகர் சந்திப்பு முதல் விளாங் குறிச்சி பாலம் வரை தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம் பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.528.35 லட்சம் மதிப்பீட்டில் 2.96 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலை பணியின் தரத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆய்வு செய்தார். இதில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.