districts

img

பாரதிபுரம் பள்ளியில் ரூ.1.04 கோடி மதிப்பில் வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம்

திருப்பூர், ஜன.20 - பாரதிபுரம் நடுநிலைப்பள்ளியில் ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் வகுப்பறைகள் கட்டும் பணி வெள்ளியன்று துவங்கப்பட்டது. திருப்பூர் ஒன்றியம், இடுவாயில் உள்ள  ஆரம்பப்பள்ளிக்கும், பாரதிபுரத்தில் உள்ள  நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் வேண்டுமென ஊராட்சி மன்ற தலைவர் கே. கணேசன் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர்  30ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலை வரிடம் நேரில் சந்தித்து  கோரிக்கை மனு கொடுத்தார். இக்கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சி யர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி  கல்வித் துறைக்கு வழங்கியுள்ள சிறப்பு நிதி யிலிருந்து இடுவாயில் உள்ள ஆரம்பப் பள் ளிக்கு ரூபாய் 65 லட்சத்து 26 ஆயிரம் மதிப் பில் நான்கு அறைகளும், பாரதிபுரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கு ரூபாய் 1  கோடியே 4 லட்சம் மதிப்பில் 6 வகுப்பறை கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார். இதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை பாரதிபுரம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான வேலை துவங்கும் நிகழ்வு நடைபெற்றது. இடுவாய் ஊராட்சி தலைவர் கே. கணே சன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ் வில் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் கற்பகம்,  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.பரம சிவம், பள்ளி தலைமை ஆசிரியர் காளீஸ் வரி சுப்பிரமணியம், ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் பி.ஈஸ்வரி, எம்.கணேசன், சுப்பிர மணி, ஒப்பந்ததாரர் தமிழ்செல்வன், மாணவ,  மாணவிகளும், ஆசிரியர்களும் பங்கேற்ற னர்.