districts

img

மேட்டூரில் காவலர் பயிற்சி நிறைவு விழா

சேலம், ஜன.6- மேட்டூரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில், 2 ஆம் நிலை காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில் ஏராமானோர் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள குள்ளவீரன் பட்டியில் காவலர் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இதில் கடந்த ஏழு மாதமாக பயிற்சி பெற்ற 485 இரண்டாம் நிலை  காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா சனியன்று நடை பெற்றது. சிறப்பு அழைப்பாளராக சேலம் மாநகர காவல்  ஆணையர் பா.விஜயகுமாரி கலந்து கொண்டு காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து கவாத்து, சட்டம், ஆயுதம் கையாளுதலில் சிறப் பாக பயிற்சி பெற்ற 12 பயிற்சி காவலர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பா.விஜயகுமாரி வழங்கினார். மேலும், பயிற்சி பள்ளி காவலர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட் டது. தொடர்ந்து பயிற்சிக் காவலர்களின் ஒத்திகை நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் பயிற்சி காவலர்கள் கண்களை கருப்பு  துணியால் கட்டிக்கொண்டு நவீன ஆயுதங்களை கழற்றி,  பூட்டி அசத்தினர். இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர துணை ஆணையர் ராஜேந்திரன், பயிற்சி பள்ளி முதல்வர் நாகராஜ், மேட்டூர் துணை காவல் கண்காணிப்பாளர் மரியமுத்து, மேட் டூர் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன், கருமலை கூடல் ஆய்வாளர் குமரன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.