districts

img

மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு

சேலம், பிப்.26- இலங்கை கடற்படையால் சிறைபிடிக் கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடு தலை செய்யக்கோரி, மீனவ கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட உள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முழு ஆதரவையும் தருவதாக, சேலம்  மாவட்டத் தலைவர் பாஸ்கர் தெரிவித்துள் ளார். சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி  அலுவலகத்தில், மாவட்டத் தலைவர் பாஸ்கர்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண் டுகால பாஜக ஆட்சியில், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அடக்கு முறை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த  2014 முதல் பிப்ரவரி 2024 வரையிலுமான 10 ஆண்டுகளில் சுமார் 400 படகுகள் உட்பட 3179 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி ஆட்சியின் வெளியுறவுக் கொள்கை யில் ஏற்பட்ட தோல்வியினால் தான் தமிழ் நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற் படையினரின் அத்துமீறலும், தாக்குதலும் தொடர்கிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு பாம்பனில் பாஜகவினர், சுஷ்மா சுவராஜ் தலைமையில் கடல் தாமரை மாநாடு நடத்தி,  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்க ளுக்கென தனி அமைச்சகம், இலங்கை அர சால் தமிழக மீனவர்கள் கைது இருக்காது என வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தார்கள். அந்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றாமல் தமிழக மீன வர்களுக்கு எதிரான அரசாக ஒன்றிய பா.ஜ.க.  அரசு செயல்பட்டு வருகிறது.  தமிழக மீனவர்கள் கைது செய்யப் பட்டதை கண்டிக்கிற வகையில், பாரம்பரி யமாக பங்கேற்கிற கச்சத்தீவு அந்தோணி யார் கோவில் திருவிழாவை புறக்கணிப் பது எனவும், இன்று முதல் தொடர்  உண்ணாவிரதமும் இருப்பதாக இராமேஸ்வ ரம் மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார் பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மீன வர் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் முழு  ஆதரவு அளிக்கிறது என்றார்.