கோவை, பிப்.17- உணவளிக்கும் விவசாயிகள் மீது புகை குண்டு வீசும் மோடியின் மோசமான ஆட்சியில் இந்தியா ரூ.155 லட்சம் கோடி கடனில் சிக்கி தவிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் ஷரிதா லைட்ப்லாங் குற்றம்சாட்டினார். கோவை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஷரிதா லைட்ப் லாங், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்து ரையை நடைமுறைப்படுத்துவோம் என்ற வாக்கு றுதி கொடுத்து, 2014ஆம் ஆண்டு பதவி ஏற்ற பிரத மர் மோடி, இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத் ரத்னா விருது கொடுப்பதை காட்டிலும், அவரது பரிந் துரைகளை செயல்படுத்துவதே அவருக்கு செலுத் தும் உண்மையான நன்றி கடனாகும். ஆனால், குறைந்தபட்ச ஆதார விலையை செயல்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றத்தில் பாஜக தெரிவித் துள்ளது மோடி அரசு. இது விவசாயிகளுக்கு அளிக்கப்படும் துரோகம். கொடுத்த வாக்குறு தியை நிறைவேற்ற வலியுறுத்தி தில்லியில் அமைதி பேரணி நடத்த வந்த விவசாயிகளை, ஒன்றிய பாஜக அரசு தடுத்து நிறுத்தி கண்ணீர் புகை குண்டு களைக் கொண்டும், தடுப்பு வேலிகளை ஏற்படுத்தி யும் விரட்டி அடிக்கின்றனர். வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால். விவசாய பொருட்க ளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உடனடி யாக அது அமல்படுத்தப்படும். கருப்பு பணத்தை கட்டுப்படுத்தப் போவதாக கூறி, கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரத்தை, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தது. அவ்வாறு கொண்டு வந்ததை தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டில் இருந்து 2023 ஆம் ஆண்டு வரை, பாஜக மட்டும் சுமார் 6566 கோடி ரூபாய் தேர்தல் பத்திரமாக பெற்றுள்ளது. தங்களை வளர்த் துக்கொள்ள மட்டுமே, இந்த தேர்தல் பத்திர முறையை பாஜக கொண்டு வந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தேர்தல் பத்திரங்கள் தொடர் பான இந்த தீர்ப்பு, பாஜகவுக்கு பெருத்த அடி. பாஜகவின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ள இந்த காலத்தில்தான் இந்தியாவின் கடன் சுமை கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்காக அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு ரூ.55 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன் தொகை தற்போது ரூ.155 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மோடி ஆட்சியின் அநீதி இன் னும் சில மாதங்களில் அனைத்தும் முடிவுக்கு வரும். நாடாளுமன்றத்தில், கடந்த 10 ஆண்டுகள் நடந்த ஆட்சி குறித்து பிரதமர் மோடி பேசாமல், 60 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை பேசி மக்களை திசை திருப்புகிறார். நாங்கள், கடந்த 10 ஆண்டுகள் பாஜக செய்த அநீதியை கிராமந்தோறும் எடுத்துச் சென்று மக்களுக்கு விளக்குவோம். பெரிய முத லாளிகளுக்கு மட்டுமே பாஜக அரசு. ஏழை மக்க ளுக்கு கிடையாது என விமர்சிப்போம், என்றார். முன்னதாக, திமுக ஆட்சி குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், திமுக நல்ல முறை யில் ஆட்சி செய்து வருகிறது. இது காங்கிரஸ் கட் சிக்கு திருப்தியாக உள்ளது, என்றார்.