தருமபுரி, மே 5- தருமபுரியில் நடைபெற்ற போதை பொருள் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பாராட்டு சான்றிதழை முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார். தருமபுரி மாவட்ட அளவில் போதை ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு வாக்கியம் எழுது தல் போட்டி அரசுப்பள்ளி மாணவர்களி டையே நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டு போதை ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு வாக்கி யங்கள் எழுதினர். இதில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்த சட்டையம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி தீ.கிரிஜாவுக்கு இடைநிலை கல்வி திட்டத்தின் மூலம் மாவட்ட அளவில் வழங் கப்பட்ட பாராட்டு சான்று மற்றும் ரூ.2 ஆயி ரத்திற்கான காசோலையினையும், போட்டி யில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குண சேகரன் வழங்கி பாராட்டினார்.