திருப்பூர், ஜூன் 6- கேலோ இந்தியா யூத் களரி விளை யாட்டு போட்டியில் கலந்து கொள்ள உடு மலையிலிருந்து வீரர்கள் ஹரியானா மாநி லத்துக்குப் பயணம் புறப்பட்டார்கள். திருப் பூர் ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மற் றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வா கிகள் அவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர். கேலோ இந்தியா யூத் கேம் விளையாட் டுப் போட்டிகள் ஜுன் மாதம் 3-ஆம் தேதி முதல் 13 -ஆம் தேதி வரை ஹரியானா பஞ்ச் குலாவில் நடைபெறுகிறது. இதில் முதல் முறையாக களரிப் போட்டிகள் ஜூன் மாதம் 10,11,12 ஆகிய மூன்று நாள் நடைபெறுகி றது. இந்த ஆண்டு இதில் தேர்வான 17 வய திற்கு உட்பட்ட 25 வீரர்கள் மற்றும் வீராங்க ளைகள் தமிழ்நாடு களரிப் பயட்டு, தமிழகம் சார்பாக கலந்து கொள்ள உள்ளனர். இதில் வெற்றி பெறும் மாணவர்க ளுக்கு மத்திய அரசு சார்பாக சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்படும். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் தமிழ் நாடு களரிப் பயட்டு அசோஷியேசன் செய லாளர் சு.வீரமணி ஆசான் தலைமையில் பங்கு பெற உள்ளனர். இதற்காக இவர்கள் உடுமலையிலிருந்து 5ஆம் தேதி புறப்பட்ட னர். திருப்பூர் ரயில் நிலையத்தில் மார்க் க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணிகண் டன், சிஐடியு பனியன் சங்கப் பொதுச் செய லாளர் ஜி.சம்பத் ஆகியோர் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டி வழிய னுப்பி வைத்தனர்.