திருப்பூர் ஜூலை 22- திருப்பூர் மாவட்டம்,அடுக்குமாடி குடி யிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்ட பயனாளிகளுக்கு உரிய தகவல் அளிக்கா ததால் தொகை செலுத்துவதில் குழப்பம் ஆக்கிரமிப்பை அகற்றும் இடிக்கும் பணி 2 நாட்களில் தொடங்க உள்ளதால் பொதுமக் கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் சாயப்பட்டறை வீதி நீர்நிலை புறம்போக்கில் பொதுமக்கள் வசித்து வந்த னர்.இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு வீடுகளை காலி செய்யச்சொல்லி, நோட்டீஸ் வழங்கி னர். இதையடுத்து பொதுமக்கள் வீடுகளை காலி செய்ய போதிய கால அவகாசம் வழங் கப்பட்டது. நெருப்பெரிச்சல் பகுதியில் மேலும் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய குலுக்கல் முறை நடந்தது. அரசுக்கு செலுத்த வேண்டிய பங்களிப்புத்தொகைக்கு கடன் உதவி செய்வ தாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு உரிய தகவல் அளிக்காத தால் தொகை செலுத்துவதில் குழப்பம் ஏற்பட் டது. இது தொடர்பாக இன்று அதிகாரிகளு டன் அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். இதனிடையே மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், வீடுகள் இடிக்கும் பணி 2 நாட்களில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.