சேலம், ஜூன் 2- சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழம் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளதால், தற்போது கடைவீதிகளில் மாம்பழம் வாசனை கமழுகிறது. சேலம் மாவட்டத்தில் விளையும் மாம்ப ழங்களுக்கு தனிசுவை உண்டு என்பதால், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது. ஆத்தூர், வாழப்பாடி, காரிப்பட்டி, குப்பனூர், கூட்டாத்துப்பட்டி, வரகம்பாடி, அயோத்தியாப்பட்டணம், நங்க வள்ளி, ஜலகண்டாபுரம், எடப்பாடி மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மாம்பழங்களை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். மேலும் ஆன்லைனிலும் உல கம் முழுவதும் இந்த மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. வழக்கமாக மார்ச் மாதம் மாத மத்தியில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை மாம்பழங்கள் வரத்து அதிகளவில் இருக்கும். ஆனால், இந்தாண்டு பருவம் தவறி பெய்த மழையால் மாங்காய் உற்பத்தி கடுமை யாக குறைந்தது. இதனால் சேலம் மார்க்கெட் டுகளுக்கு மாங்காய் வரத்து குறைவாக இருந்தது. இந்நிலையில், தற்போது மாம்ப ழம் வரத்து படிப்படியாக அதிகரித்து, சீசன் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் சேலம் கடை வீதிகளில் உள்ள கடைகளில் மாம்ப ழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட் டுள்ளன. குறிப்பாக பெங்களூரா, குண்டு, அல்போன்சா, மல்கோவா, நீலம், இமாம் பசந்த், பங்கணப்பள்ளி, செந்தூரா, கிளி மூக்கு, குதாதத் உள்ளிட்ட பல ரகங்கள் அதிக ளவில் விற்பனைக்கு வந்துள்ளன. சேலம் மார்க்கெட்டுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு 40 டன் அளவிற்கு மாம்பழங்கள் வரத்துள்ளது. இதனால் சேலம் மாநகர தெருக்களில் மாம்பழ வாசம் வீச தொடங்கி உள்ளது. சேலம் மாநகர தெருக்கள், ஏற்காடு சாலை, செவ்வாய்ப்பேட்டை கடை வீதி, அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிக ளில் கடைகளிலும், தெருவோர தள்ளுவண்டி களிலும் மாம்பழ விற்பனை அதிகரித்துள் ளது. இதனால் கடை வீதிகளிலும், சேலம் மாநகர தெருக்களிலும் மாம்பழ வாசம் கம, கமக்க தொடங்கி உள்ளது. சேலம் கடை வீதியில் மாம்பழங்கள் தற்போது ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையாகி றது. கடந்தாண்டைவிட விலை சற்று அதிகமாக இருந்தாலும், கடந்த வாரத்தை விட தற்போது விலை குறைந்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டவை பறிமுதல்
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கண்ணன், ராஜா, சிங்காரவேலு, ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். ஆத்தூர் பேருந்து நிலையம், புதுப்பேட்டை, கோட்டை, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழக் குடோன்கள் மற்றும் சில்லறை விற்பனை கடை களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டி ருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மாம்பழம், முலாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், இந்த பழங்களை வைத்திருந்த வியாபாரிகளுக்கு எச்ச ரிக்கை விடுத்து, இனி இதுபோன்ற தவறுகளை மேற்கொள்ளக்கூடாது என அறிவு றுத்தினர். அதனையும் மீறினால், வியாபாரிகள் மீது,குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத் துள்ளனர்.