ஈரோடு, பிப். 15- ஈரோடு மாவட்ட அரசுப் பள்ளிக ளில் செயல்பட்டுவரும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களுக் கான மாநாடு நந்தா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறையின் சார் பில் அரசுப்பள்ளிகளில் செயல் பட்டுவரும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற் றது. இம்மாநாட்டில் சிறப்பாக செயல்பட்ட 32 பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் களை ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வில் பங்கேற்று ஆட்சி யர் பேசுகையில், பள்ளியின் முன் னேற்றத்திற்காகவும், பள்ளி செயல் பாடுகளை மேலாண்மை செய்வதற் காகவும், இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் ஏற்படுத்தப்பட்ட குழுவே பள்ளி மேலாண்மைக்குழு வாகும். ஈரோடு மாவட்டத்தில்உள்ள 1288 அரசுப்பள்ளிகளில்பள்ளி மேலாண் மைக்குழு மறுகட்டமைப்பு செய்யப் பட்டு, பள்ளி மேலாண்மைக்குழுக் கூட்டமானது மாதந்தோறும் முதல் வெள்ளிகிழமை நடைபெற்று வரு கிறது. பள்ளியை சுற்றியுள்ள குடியி ருப்பு பகுதிகளிலிருந்து பள்ளி வயது குழந்தைகளை கண்டறிந்து பள்ளி யில் சேர்த்தல், பள்ளிக்குச்செல் லாத, இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து வயதிற்கேற்ற வகுப்பில் சேர்த்து கண்காணித்தல்ஆகிய பணிகள் இந்த குழுவால் மேற் கொள்ளப்படும். பள்ளிகளில் உள்ள உட்கட்டமைப்பு, ஆசிரியர்கள், மாணக்கர்களின்வருகை, காலை உணவுத்திட்டம் மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகளையும் பள்ளி மேலாண்மைக்குழு கண்காணிக்க வேண்டும் என்றார். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் நந்தா குழுமத்தின் சார்பில் பெருந் துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட 5 அரசு பள்ளிகளைச் சேர்ந்த நூலகங்களுக்கு தலா 750 புத்தகங் கள் மற்றும் அலமாரி ஆகியவற் றினை வழங்கினார். மேலும், அரசு பள்ளிகளுக்கு புத்தகக் கொடை விழா வாகனத்தினை கொடிய சைத்து துவக்கி வைத்தார். மேலும், பள்ளி மேலாண்மைக் குழுவில் சிறப் பாக செயல்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரி யர்கள் மற்றும் முன்னாள் மாணவ, மாணவியர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்துக்களைச் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.சம்பத், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முக வடிவு மற்றும் கோபி, நம்பியூர், பவானி, சத்தியமங்கலம் ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.