districts

img

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியை கண்டித்து

கோவை, டிச.18- அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர்குமாரை கண்டித்து இந்திய வழக் குரைஞர்கள் சங்கத்தினர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மக்களின் ஒற்றுமையை சீர் குலைத்து பிரிவினைவாத கருத்துக் களை தொடர்ந்து பரப்பிவரும் உத்திரப் பிரதேச மாநில அலகாபாத் உயர்நீதி மன்ற நீதிபதி சேகர்குமாரை கண்டித்து  இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தினர்  கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு புதனன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத் திற்கு வழக்கறிஞர் சோபியா தலைமை  வகித்தார். இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.பி  சக்திவேல், அகில இந்திய வழக்கறி ஞர் சங்க மாவட்டச் செயலாளர் ஜோதி குமார், மக்கள் சிவில் உரிமை கழகம்  மாநிலச் செயலாளர் சேகர் அண்ணா துரை, தேசிய செயலாளர் பாலமுருகன்  ஆகியோர் கண்டன உரையாற்றினர். நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான  வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.